எப்பொழுதும் பாகிஸ்தானுக்கு துணை நிற்போம் என சீனா தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கிறது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர் .
இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை எடுத்தது. இதனை அடுத்து மே 7ஆம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்கியது. இந்நிலையில் பாகிஸ்தான் மே 9ஆம் தேதி இரவு வட இந்திய நகரங்களில் இருக்கும் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை இந்தியா தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் முறியடித்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் தாக்குதல் நடைபெற்று வரக்கூடிய சூழலில் சீனா பாகிஸ்தானுக்கு துணை நிற்பதாக தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்கவும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யவும் துணை நிற்போம் என சீனா கூறி இருக்கிறது.
பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்கிறோம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் உடன் தொலைபேசி வாயிலாக பேசிய போது வாங் யி இவ்வாறு தெரிவித்ததாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி உரையாடலின் போது பாகிஸ்தான் அமைச்சர் வாங் யி இடம் இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்சினையின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கினார்.
பிடிஐ நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. பாகிஸ்தானின் உறுதியான கூட்டாளியாக சீனா தொடர்ந்து நிற்கும் என சீன அமைச்சர் வாங் யி அப்போது வாக்குறுதி அளித்தார் என பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சவாலான காலகட்டத்தில் பாகிஸ்தான் நிதானத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டதாக அப்போது வாங் யி பாராட்டினார் என பாகிஸ்தான் அரசு கூறி இருக்கிறது.
முன்னதாக பாகிஸ்தான் அமைச்சர் ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான தற்போதைய நிலவரம் குறித்து பேசி இருக்கிறார். முன்னதாக சீன அமைச்சர் வாங் இ இந்திய தேசிய பாதுகாப்பு அஜித் தோவலுடன் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார்.பயங்கரவாதத்திற்கு எதிராக துணை நிற்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications