கிராமங்களுக்கு படையெடுக்கும் சீன இளைஞர்கள்.. ஜி ஜின்பிங் புதிய உத்தரவு.. சீனாவுக்கே இந்த நிலைமையா?!!

உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு உற்பத்தியும் உள்நாட்டு வர்த்தகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

ஆனால் கடந்த 3 வருடத்தில் சீன வர்த்தக சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் வேளையில் உலக நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் கடுமையாக பாதித்துள்ள காரணத்தால் சீன பொருளாதாரம் முழுமையாக மீள முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் தான் சீனாவின் வேலைவாய்ப்பு சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டு பல முக்கிய நகரங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளம் தலைமுறையினர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது அந்நாட்டில் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டின் பழைய ஐடியாவை கையில் எடுத்துள்ளார்.

கிராமங்களுக்கு படையெடுக்கும் சீன இளைஞர்கள்.. ஜி ஜின்பிங் புதிய உத்தரவு..  சீனாவுக்கே இந்த நிலைமையா?!

டிசம்பர் மாதமே சீனாவின் பொருளாதார நிலை மோசமடைய துவங்கிய நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங், சீனாவின் ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நேரம் வந்துவிட்டது. நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் கிராமங்களிலும், சிறிய டவுன் பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பல தசாப்தங்களுக்கு முன்பு சீனாவின் முன்னாள் அதிபரான Mao Zedong , சீனாவின் ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல லட்சம் இளைஞர்களை கிராமங்களுக்கு அழைத்து சென்றார். இது பெரிய அளவில் அக்காலக்கட்டத்தில் பலன் அளித்தாலும் தற்போதைய நிலையில் இது சாத்தியப்படுமா என்ற சந்தேகம் டிசம்பர் மாதம் முதல் சீன மக்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் சீனாவில் மிகவும் செழிப்பான, பணக்கார மாகாணமான Guangdong அரசு கடந்த வாரம் வேலையில்லாமல் இருக்கும் 300000 இளைஞர்களை அடுத்த 2- 3 வருடத்திற்கு கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை சீன மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

கிராமங்களுக்கு படையெடுக்கும் சீன இளைஞர்கள்.. ஜி ஜின்பிங் புதிய உத்தரவு..  சீனாவுக்கே இந்த நிலைமையா?!

Guangdong என்பது சீனாவின் உற்பத்தி பவர்ஹவுஸ், இந்த மாகாணத்திற்கே இந்த மோசமான நிலையெனில் மற்ற மாகாணங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. இதேபோல் கடந்த மாதம் Guangdong அரசு கல்லூரி மாணவர்கள், இளம் தொழில் முனைவோர்களை கிராமங்களில் வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ளவும், வர்த்தகத்தை உருவாக்கவும் உத்தரவிட்டது என CNN தெரிவித்துள்ளது.

Guangdong அரசு ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர்களை கிராமங்களுக்கு செல்ல ஊக்குவித்தாலும், உண்மையான நிலவரம் என்னவென்றால் சீன நகரங்களில் இருக்கும் 16- முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் மத்தியிலான வேலைவாய்ப்பின்மை 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது Guangdong வரலாற்றில் 2வது மோசமான நிலவரம்.

கிராமங்களுக்கு படையெடுக்கும் சீன இளைஞர்கள்.. ஜி ஜின்பிங் புதிய உத்தரவு..  சீனாவுக்கே இந்த நிலைமையா?!

வேலைவாய்ப்பின்மை 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளது மூலம் சீனாவின் பெரு நகரங்களில் சுமார் 1.1 கோடி பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக பொருள். இந்த எண்ணிக்கைய வேகமாக குறைக்கத்தான் Guangdong போன்ற மாநில அரசுகள் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு இளைஞர்களை செல்ல உத்தரவிட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+