ஷாங்காய்: சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், அந்த நாட்டு பங்கு சந்தைகள் மீண்டும் சரிவினை நோக்கி சென்று கொண்டுள்ளன.
கொரோனாவினை முதன் முதலாக தோற்றிவித்த சீனாவில், தற்போது கொரோனாவின் தாக்கம் இல்லை, மாறாக சீனா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது.
மேலும் சீனாவில் முடங்கிபோன தொழில் சாலைகள், நிறுவனங்கள், பள்ளிகள் கல்லூரிகள் என தற்போது தான் வழக்கம் போல இயங்க தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இது சீனாவுக்கு மட்டும் அல்ல மற்ற நாடுகளுக்கும் சற்று நிம்மதியினை கொடுத்து வந்தது எனலாம்.
இரண்டாவது முறையாக பாதிப்பு
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா, மார்ச், ஏபரம் மாதம் வரையிலும் கூட சற்று அதன் தாக்கம் இருந்து வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக, எந்த கொரோனா வழக்குகளும் அங்கு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது, மீண்டும் கொரோனாவின் தாக்கம் இரண்டாவது முறையாக பரவ தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பங்கு சந்தைகள் சரிவு
இதனையடுத்து சீனாவின் பங்கு சந்தைகள் மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக சீனாவின் வுகான் மாகாணத்தில் லாக்டவுன் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் இந்த புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று சீனாவின் ஷாங்காய் காம்போசைட் குறியீடு (Shanghai Composite index) 0.02% வீழ்ச்சி கண்டு 2,894.80 ஆக முடிவடைந்துள்ளது.
இந்த குறியீடுகள் எல்லாம் வீழ்ச்சி
இதே மற்றொரு குறியீடான ப்ளூ சிப் சிஎஸ்ஐ 300 குறியீடு (blue-chip CSI300 index) 0.09 சதவீதம் வீழ்ச்சி கண்டும், இதே நிதி சம்பந்தமான குறியீடுகள் 0.06 சதவீதம் வீழ்ச்சி கண்டும், நுகர்வோர் ஸ்டேபிள்ஸ் துறையானது 0.79 சதவீதம் வீழ்ச்சி கண்டும் முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே ரியல் எஸ்டேட் குறியீடு 0.01 சதவீதமும் வீழ்ச்சி கண்டும் முடிவடைந்துள்ளது.
இந்த துறையெல்லாம் வீழ்ச்சி
ஹெல்த்கேர் சம்பந்தமான துணை குறியீடு அதிகபட்சமாக 1.59 சதவீத வீழ்ச்சியுடனும், இதே ஸ்மாலர் ஷென்சென் குறியீடு 0.24 வீழ்ச்சியுடனும், ஸ்டார்டப் போர்டு சினெக்ஸ்ட் காம்போசிட் குறியீடு 1.055 சதவீத வீழ்ச்சியுடனும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவின் தோற்றுவிப்பு மையமான வுகான் மாகாணத்தில், இன்று 5 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதுவும் ஒரே குடியிருப்பு வளாகத்தில் உள்ளவர்கள் என்றும் இடி செய்தியில் கூறியுள்ளது.
பெரும் பொருளாதார இழப்பு
இதே மே 10 அன்று சீனாவின் முக்கியமான பகுதிகளில் 17 புதிய வழக்குகளை பதிவு செய்த நிலையில் தற்போது, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனாவால், அந்த நாட்டின் இடையே சற்று கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். முதன் முறையாக கொரோனா தாக்கத்தின் போது பெரும் பொருளாதார இழப்பினை சந்தித்த சீனா, இரண்டாவது முறை, இன்னும் அலர்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications