டிக்டாக் (TikTok) செயலி மட்டுமல்லாமல், இணைய பயனர்களை உலகளவில் கண்காணிக்க சீனா பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளை பயன்படுத்தி வருவதாக ஆஸ்திரேலிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் குரல் (Voice of America) என்ற செய்தி நிறுவனம் ஆஸ்திரேலிய ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மூலோபாய கொள்கை நிறுவனம் (Australian Strategic Policy Institute) நடத்திய ஆய்வில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு நிறுவனம் ஆஸ்திரேலிய அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெற்று இயங்கி வருகிறது.
மே 2ஆம் தேதி வெளியிடப்பட்ட Australian Strategic Policy Institute அமைப்பின் அறிக்கையில், "சீன அரசின் பிரசாரப் பிரிவு, சமூக ஊடக செயலிகள் மற்றும் ஈகாமர்ஸ் தளங்கள் மற்றும் பிரபலமான ஆன்லைன் விளையாட்டு செயலிகளில் இருந்து உலக மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்காக சீன தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில செயலிகள் பட்டியலில் அந்நாட்டின் டாக்சி சேவை தளமான டிடி (DiDi), ஜென்ஷின் இம்பேக்ட் (Genshin Impact) எனும் ஆக்ஷன் கேம், பிரபலமான ஈகாமர்ஸ் தளமான Temu ஆகியவை இருக்கின்றன.
சீனா டிக்டாக் போன்ற செயலிகளை பயன்படுத்தி உலகளவிலான தகவல் சூழலை மறுவடிவமைப்பு செய்து வருகிறது. உலகளவில் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கும், சீன அரசு செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்கும், சீனாவின் கலாச்சார, தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் இராணுவ செல்வாக்கை மேம்படுத்துவதற்கும் வெளிநாடுகளில் தனது செல்வாக்கை விரிவாக்க சீனா இத்தகைய பிரபலமான செயலிகளை பயன்படுத்தி வருகிறது" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை குறித்து சீன அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக பிரச்சனைகளில் ஆஸ்திரேலிய அரசு "சீனாவுக்கு எதிரான மனநிலையை" தூண்டுவதாக சீன அரசு முன்னதாக குற்றம் சாட்டியது மறக்க முடியாது. இன்றளவும் இரு நாடுகள் மத்தியில் வர்த்தக பிரச்சனைகள் உள்ளது.
ஆஸ்திரேலிய அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியர் சமந்தா ஹோஃப்மேன் இந்த வாரம் ABC செய்தி சேனலில் பேசுகையில், செயலிகள், தளங்கள் மற்றும் விளையாட்டு ஆப்களில் இருந்து பெறப்பட்ட உலகளாவிய மக்களின் தரவுகள் சீனாவுக்கு மதிப்புமிக்கதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
டிக்டாக் தளத்தின் மூலம் உலகளவில் இருக்கும் மக்களின் தரவுகளை திரட்டி சீன அரசுக்கு பகிரப்பட்டு வருவதாக அமெரிக்காவில் நீண்ட காலமாக குற்றம்சாட்டப்பட்டு பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிக்டாக்-ஐ தடை செய்யவோ அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவோ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications