பெய்ஜிங்: வல்லரசு நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி வரும் 2வது பொருளாதார நாடாக விளங்கும் சீனாவில் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சீனாவின் பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டின் முடிவில் சுமார் 300 பேரின் சொத்துக்கள் 1.6 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பில்லியனர்கள்
ஹூரன் என்னும் ஒரு ஆய்வு நிறுவனம் "சீனா ரிச் லிஸ்ட்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் 10 பில்லியன் யுவான் அளவு சொத்துககளை கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை சீனா கண்டுள்ளது என குறிப்பிட்டு இருந்தது.
300 நபர்கள்
தற்போது சீனாவில் 10 பில்லியன் யுவான் அதாவது 1.6 பில்லியன் டாலர் அளவு சொத்துகளை கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 300 ஆக உள்ளது. இந்க திடீர் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இந்தியாவை போல அங்கும் ரியல் எஸ்டேட் பல உச்சங்களை பெற்றது.
கண்ணுக்கு தெரியாத சொத்துக்கள்
இந்த 300 பில்லியனர்களில் 160 பேர்களின் சொத்துகள் கண்ணுக்கு தெரியாத சொத்துக்களாகவே உள்ளது. இதன் மதிப்புமும் கணிப்புகளுக்கும் சம்மந்தமற்று உள்ளதாகவும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்தது.
இந்த 300 பில்லியனர்களில் 160 பேர்களின் சொத்துகள் கண்ணுக்கு தெரியாத சொத்துக்களாகவே உள்ளது. இதன் மதிப்புமும் கணிப்புகளுக்கும் சம்மந்தமற்று உள்ளதாகவும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்தது.
ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி
இந்த இரு துறைகளின் அசாதராமான வளர்ச்சியால் சீன மக்களிடையே பணபுழக்கம் அதிகரித்துள்ளது. அதனால் 1 பில்லியன் யுவான் மேல் சொத்துகளை கொண்ட 8,300 பேர்கள் உள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் என்ன நிலை
சீனாவை போல் இந்தியாவும் பல துறைகளில் சிறந்து விளங்கி வந்தாலும், இங்கு பணக்காரர்களின் வளர்ச்சியை விட ஏழைகளின் எண்ணிக்கை வளர்ச்சி அதிகமாக உள்ளதி. இதனால் நாட்டின் மக்களின் வாழ்வு நிலை பல மாற்றுதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.