பெய்ஜிங்: சீனாவின் பணக்காரர் ஒருவர் ஒரே நாளில் தன்னுடைய சொத்து மதிப்பில் இருந்து 14 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். பிபிடி ஹோல்டிங்ஸ் என்ற சீன நிறுவனத்தின் தலைவர் தான் காலின் ஹுவாங். இவர் டெமு என்ற சீனாவின் புகழ்பெற்ற இ -காமெர்ஸ் தளத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் 14 பில்லியன் டாலர்கள் குறைந்திருக்கிறது.
பிபிடி நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிவடைந்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இத்தனை கால தொழில் வாழ்க்கையில் ஒரே நாளில் இவ்வளவு அதிகமான சொத்தை அவர் இழப்பது இதுவே முதல்முறை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சரிவால் சீன பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அவர் தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது அவருடைய சொத்து மதிப்பு 35.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மீண்டும் சீனாவின் பணக்காரர் என முதலிடத்தை பிடித்திருக்கிறார் ஸோன் சாங்சாங் , தற்போது அவரது சொத்து மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
சீனாவை பொருத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளில் டெமு இ-காமர்ஸ் தளத்தின் உரிமையாளரான ஹுவானின் சொத்து மதிப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. சீனாவில் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாக இருந்தது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 71.5 பில்லியன் டாலர்களை எட்டியது.
இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த ஹூவான் கடந்த 2015 ஆம் ஆண்டு பிபிடி ஹோல்டிங்ஸ் சென்ற நிறுவனத்தை தொடங்கினார் .இந்த நிறுவனத்தின் கீழ் இகாமர்ஸ் தளங்கள் மற்றும் வீடியோ கேம் நிறுவனங்களை இவர் உருவாக்கி நடத்தி வந்தார். இதன் காரணமாக இவரது சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்து வந்தது.
கடந்த காலாண்டில் பிபிடி நிறுவனத்தின் வருமானம் குறைந்ததை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பும் குறைந்தது. அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மதிப்பு ஒரே நாளில் 29 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.
டெமு நிறுவனம் சீனாவில் அதிகபட்ச தள்ளுபடியுடன் பொருட்களை விற்பனை செய்து வரக்கூடிய இ-காமர்ஸ் தளமாகும். இந்த நிறுவனம் அமெரிக்காவிலும் புகழ்பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகிறது.
இந்த நிறுவனம் காரணமாக தங்களுடைய தொழில்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீனாவை சேர்ந்த சிறு தொழிலாளர்கள் அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். மற்ற நாடுகளிலும் கூட இந்த நிறுவனம் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதால் தங்களுடைய பொருட்கள் விற்பனை குறைந்து இருப்பதாக உள்நாட்டு வியாபாரிகள் புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர்.
Story Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications