சீனா: உலகளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்க நிறுவனங்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன. கூடிய விரைவில் சீனா இந்த இடத்திற்கு வந்துவிடும் போல தெரிகிறது. ஏனெனில் அமெரிக்காவின் தடையையும் மீறி சீனாவிடம் அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சிப்கள் சென்று சேர்ந்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த என்விடியா, இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு சிப்புகளை தயாரிக்கின்றன. இத்தகைய சிப்புகள் பாதுகாப்புத் துறைக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அதிநவீன சிப்புகள் சீனாவின் கைகளுக்கு செல்வது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசு கருதுகிறது. இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிற்கு நவீன செயற்கை நுண்ணறிவு சிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 2022ஆம் ஆண்டிலேயே அமெரிக்க அரசு தடை விதித்தது.

ஆனால் இந்த தடையையும் மீறி சீனர்கள் மத்தியில் நவீன ஏஐ சிப்புகள் கிடைத்திருப்பது நியூயார்க் டைம்ஸ் இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் முக்கியமான மின்னணு சந்தைகளில் ஏஐ சிப்புகள் எளிதாக கிடைக்கின்றனவாம். இவை அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையாம். செல்ஃப் டிரைவிங் கார்கள், சாட் பாட்டுகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள், ராணுவ பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு தேவைப்படக்கூடிய சக்தி வாய்ந்த சிப்புகள் சீனா வசம் கிடைத்திருப்பது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க அரசு குறிப்பிட்ட சீன நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் சிப்புகளை ஏற்றுமதி செய்யக்கூடாது அல்லது விற்பனை செய்யக்கூடாது என அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த தடை காரணமாக சீனா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பின்னடைவை சந்தித்தது.
எனவே மாற்று வழிகளில் இந்த சிப்புகளை பெறும் நடைமுறைகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு இருக்கின்றன. குறிப்பாக சீனாவை சேர்ந்த அதிகாரிகள் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த சிப்புகளை பெறுவது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி வேறு நாடுகளின் மூலம் கள்ள சந்தைகளிலும் இத்தகைய சிப்புகளை வாங்குவது தெரிய வந்திருக்கிறது. சீனாவை பொறுத்தவரை இதுபோல கள்ளச் சந்தையில் பொருட்களை வாங்குவது சட்டவிரோதம் கிடையாது. எனவே அங்கு அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த அதிநவீன சிப்புகள் தாராளமாக கிடைப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
இதனிடையே என்விடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அரசின் தடையை பின்பற்றி நாங்கள் சீனாவிற்கு சிப்புகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளன. எங்களிடம் இருந்து ஒரு பொருள் விற்பனையான பிறகு அது எங்கு செல்கிறது யாரிடம் செல்கிறது என்பதை எங்களால் கவனிக்க முடியாது, ஒருவேளை எங்களது விநியோகஸ்தர்களில் யாரேனும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளன.
தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி அமெரிக்க நிறுவனங்கள் சிப்புகளை சீனாவுக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. தற்போது கள்ளச்சந்தையிலும் இவற்றை வாங்கும் இவர்கள் சீன ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்குகிறார்களாம். மேலும் இந்த சிப்புகளை மாடலாக கொண்டு சீனா நிறுவனங்களே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் இந்த செய்தியின் மூலம் தெரிய வந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications