இன்று இளைஞர் மத்தியிலும், தொழில்நுட்ப சந்தையிலும் டிரோன் என்பது அனைவரையும் கவரும் ஒன்றாக மாறிவருகிறது. இதன் பயன்பாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும், சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இதனை எப்படி தனது வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது என்பதையே யோசித்து வருகிறது.
இத்தகைய டிரோனை பல்வேறு வகையில் தொடர்ந்து மேம்படுத்தி வரும் ஒரு நிறுவனம் தான் DJI. இந்நிறுவனத்தின் நிறுவனர் தான் பிரான்ங் வாங் டாவ்.
போர்ப்ஸ்
சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை டெக்னாலஜி துறையில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை உலகளவில் ஆய்வு செய்து வெளியிட்டது.
இப்பட்டியலில் பிராங்க் வாங் டாவ் 3.2 பில்லியன் டாலர் அதாவது 20,500 கோடி ரூபாய் உடன் 76வது இடத்தை பிடித்துள்ளார். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
இளமையான பில்லியனர்
ஆசியாவிலேயே மிகவும் குறைந்த வயதில் டெக் துறையில் பில்லியனர் என்ற அந்தஸ்தை பெற்றது பிராங்க் வாங் டாவ் மட்டுமே. இந்தியாவில் இருந்து யாருமே இல்லையா என்றால்,
இப்பட்டியில் இரண்டு இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ஒன்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, மற்றொன்று எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார்.
DJI
11 வருடங்களுக்கு முன்பு பிராங்க் வாங் டாவ், ஹாங்காங் சையின்ஸ் மற்றும் டெக்னாலஜி பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டு இருக்கும்போது இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் பின் ஷென்சென் அருகில் உற்பத்தி தளத்தை அமைத்தார் பிராங்க் வாங் டாவ்.
உலகளாவிய சந்தை
இன்று டிரோன் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கும் செலுத்தும் நிறுவனம் என்றால் அது DJIதான். இந்நிறுவனம் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகவே தனது வர்த்தகத்தை செய்து வருகிறது.
விலை
இந்நிறுவனத்தின் ஒரு டிரோன் விலை 1000 டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications