வாஷிங்டன், அமெரிக்கா: எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல் திறன் துறை 2 லட்சம் அரசு கிரெடிட் கார்டுகளை முடக்கியுள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பதவி ஏற்றதை அடுத்து அரசு செலவினங்களை குறைப்பதற்காகவும் அரசு செயல் திறனை மேம்படுத்துவதற்காகவும் Department of Government Efficiency என்ற பெயரில் அரசு செயல் திறன் துறையை உருவாக்கியது. இந்த துறைக்கு எலான் மஸ்க் தலைமை பொறுப்பு வகிக்கிறார்.
அரசு செயல் திறன் துறை அரசு செலவினங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 18ஆம் தேதி இந்த துறை சார்பாக ஒரு அறிவிப்பு வெளியானது. இதன்படி அரசு பல்வேறு துறைகளுக்கும் வழங்கி இருக்கும் கிரெடிட் கார்டுகளை ஆய்வு செய்து வருவதாகவும், தேவையற்ற செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில் அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி அமெரிக்க அரசு மொத்தம் 4.6 மில்லியன் கிரெடிட் கார்டுகளை பயன்பாட்டில் வைத்திருக்கிறதாம். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் 90 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. இந்த நிலையில் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்காக இந்த கிரெடிட் கார்டு பயன்பாடுகளை குறைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்து பல்வேறு துறைகளிலும் ஆய்வு மேற்கொண்டது.
மூன்று வாரங்களாக 16 அரசுத் துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வினைத் தொடர்ந்து 2 லட்சம் அரசு கிரெடிட் கார்டுகள் முடக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அது தொடர்பான விவரங்களையும் அரசு செயல் திறன் துறை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. தேவையற்ற செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கார்டுகளையே முடக்கி இருப்பதாக விளக்கம் தந்துள்ளது. கடந்த வாரம் தான் அரசு செயல் திறன் துறை 1.4 லட்சம் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் எலான் மஸ்க், கிரெடிட் கார்டு என்ற பெயரில் பல்வேறு அரசு துறைகளிலும் மறைமுகமாக பல லட்சம் டாலர்கள் செலவிடப்படுவதாக கூறியுள்ளார். இதனை இன்னும் குறைக்க வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அரசு செலவினங்களை குறைப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் கிரெடிட் கார்டு பயன்பாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அரசு செயல் திறன் துறை கூறி இருக்கிறது. இந்த கிரெடிட் கார்டு நீக்கம் மூலம் பொது சேவை மேலாண்மை துறை , அரசு அலுவலர்களுக்கான மேலாண்மை துறை, தொழிலாளர் நலத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, நாசா , உள்நாட்டு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications