அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்ற துறையில் இயங்கி வந்த 20 நீதிபதிகளை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே அரசு செலவினங்களை குறைப்பது, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே நீதிபதிகள் பணி நீக்கம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை அன்று டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் குடியேற்றத்துறையில் பணியாற்றி வரும் 20 நீதிபதிகள் (immigration judge) பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இவர்களில் 13 பேர் புதிதாக பதவி ஏற்க இருந்தவர்கள், ஐந்து பேர் கூடுதல் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்தவர்கள், 2 பேர் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் என தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு எந்தவித நோட்டீசும் வழங்காமலே திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மாற்றாக வேறு நபர்கள் நியமனம் செய்யப்படுவார்களா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
தற்போதைக்கு அமெரிக்காவில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் இலட்சக்கணக்கில் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த துறை சார்ந்த நீதிபதிகளை பணிநீக்கம் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது குடியேற்றத்துறை தொடர்பாக 3.7 மில்லியன் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளை தீர்ப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும் என சொல்லப்படும் நிலையில், அதனை வேகப்படுத்தாமல் டிரம்ப் நிர்வாகம் நீதிபதிகளை பணி நீக்கம் செய்திருப்பது மேலும் இந்த வழக்குகளில் முடிவு எட்டப்படுவதை தாமதப்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக டிரம்ப் அதிபராக முதன்முறை பதவி வகித்த போது குடியேற்றம் சம்பந்தமாக லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைவில் அந்த வழக்குகளை நீதிபதிகள் முடித்து வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் .பல்வேறு அரசியல் தலைவர்களும் குடியேற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவில் முடித்து வைக்க வேண்டும், இதற்காக இந்த துறைக்கு கூடுதலாக ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம் நீதிபதிகளை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.
முன்னதாக டிரம்ப் நிர்வாகம் பயிற்சி நிலையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யும்படி அரசு துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. டொனால்ட் டிரம்ப் அரசு , அரசின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல் திறன் துறை என்ற துறையை உருவாக்கி இருக்கிறது. இந்த துறை அரசு பணிகளை டிஜிட்டல் மயமாக்குவது என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications