துபாய்: வித்தியாசமான விதிகள், கலாச்சாரம், சம்பிரதாயங்களுக்கு பெயர் போன ஊர் ஐக்கிய அரபு அமீரகம். அதே போல நம் மக்கள் பிழைக்க அதிகமாக தேர்ந்தெடுக்கும் ஊரும் அதே ஐக்கிய அரபு அமீரகம் தான். சரி விஷயத்துக்கு வருவோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான துபாயில் தான் நாம் மேலே தலைப்பில் சொன்னது போல இனி உண்மையாகவே நடக்கப் போகிறதாம். இனி துபாய் நகராட்சிக்குள், பொது வாகனம் நிறுத்துமிடத்தில் யாராவது தங்கள் கார்களை அழுக்காக வைத்திருந்தால் அவர்களுக்கு 10,000 ரூபாய் (500 திராம்) அபராதம் விதிக்கப்படும் எனச் சொல்லி கிளி கிளப்பி இருக்கிறார்கள் துபாய் நகராட்சி அதிகாரிகள்.

இப்படி அழுக்கான கார்களை பொது வாகனம் நிறுத்தும் இடங்களில் அழுக்காக நிறுத்துவதால் துபாய் நகரத்தின் அழகு மதிப்பும் கெடுகிறதாம். எனவே அனைவரும் தங்கள் கார்களை சுத்தமாக வைத்திருக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது துபாய் நகராட்சி .
குறிப்பாக நீண்ட நாட்களுக்கு வெளியூர் செல்லும் பயணிகள் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதோடு அழுக்காக இருக்கும் கார்களை துபாய் நகராட்சி அதிகாரிகள் (Dubai city's image-conscious authorities) கண்டுபிடித்தால், விதி மீறல் எனச் சொல்லி முதலில் 500 திராம்களுக்கு (10,000 ரூபாய்க்கான) அபராதம் விதிக்கப்படும்.
அடுத்த 15 நாட்களுக்குள் காரை ஒழுங்காகச் சுத்தப்படுத்தவில்லை என்றால், உடனடியாக அழுக்கான கார்களை அரசாங்கம் பறிமுதல் செய்துவிடும் என நெருப்பை அள்ளிக் கொட்டி இருக்கிறார்கள்.
பறிமுதல் செய்யப்படும் கார்களை எல்லாம் ஏதோ நம்மூர் காவல் நிலையத்தில் வைத்திருப்பது போல ஒரு ஓரத்தில் நிறுத்தப்படாதாம். அடுத்த சில நாட்களிலேயே பழைய சாமான் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படுமாம். அதன் பிறகும் வாகனத்தின் உரிமையாளர் தன் கார்களுக்கான அபராதங்களைச் செலுத்தவில்லை என்றால், பறிமுதல் செய்த கார்களை முறையாக ஏலம் விட்டு விற்று விடுவார்களாம்.
இந்த அறிவிப்பை துபாய் நகராட்சி அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னய்யா இது வித்தியாசமான சட்டமா இருக்கே..? நம்ம கார் சுத்தமா இல்லன்னா கூட 10,000 அபராதமா..?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications