துபாய் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது உயரமான, அழகான கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்கள் தான். அதிலும் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பனை மரம் (Palm Jumeirah) போன்ற தீவுகள் அருமை.
இந்த வகையில் துபாய் நாட்டின் 75 சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி தளத்தை இந்நாடு அமைக்க உள்ளது.
கான்சென்டிரேடட் சோலார் பவர் (CPS)
அடுத்த 5 வருடத்தில் துபாய் நாட்டில் மிகப்பெரிய பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்தக் கான்சென்டிரேடட் சோலர் பவர் திட்டம் தான் உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி தளமாக இருக்கப் போகிறது.
1,000 மெகாவாட் மின்சாரம்
CPS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கான்சென்டிரேடட் சோலார் பவர் திட்டம் ஏற்கனவே உலகில் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்தாலும், மிகப்பெரிய அளவில் யாரும் முயற்சி செய்யவில்லை.
துபாய் மண்ணில் அமைக்கப்படும் இந்தச் சிபிஎஸ், 2030ஆம் வருடத்திற்குள் சுமார் 1,000 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் திறன் வாய்ந்தது.
75 சதவீத மின்சாரத் தேவை
CPS திட்டத்தின் வாயிலாக 2050ஆம் ஆண்டுக்குள் இந்நாட்டின் 75 சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு இத்திட்டத்தை வகுக்கப்பட்டுள்ளது.
ஹூலியோஸ்டாட்ஸ்
மேலும் கான்சென்டிரேடட் சோலார் பவர் திட்டத்தில் சோலார் பேனல்களை heliostats முறையில் அதாவது வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் வட்டத்தின் நடுவில் இருக்கும் சேமிப்பு மற்றும் பரிமாற்ற தளத்திற்கு வரும்.
மொரோக்கோ
இதேபோன்ற ஹூலியோஸ்டாஸ் திட்டம் மொரோக்கோ நாட்டில் உள்ளது, ஆனால் அது வெறும் 150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
பூர்ஜ் கலிபா
துபாய் மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியம் (DEWA) பூர்ஜ் கலிபா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கை கூட்டத்தில் DEWA அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான Saeed Mohammad Al Tayer இத்திட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
மலிவான மின்சாரம்
CPS மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகவும் மலிவானதாக இருக்கும் எனவும் சையத் முகமத் தெரிவித்தார். தற்போதைய கணிப்புகளின் படி ஒரு கிலோவாட் மின்சாரம் 8 அமெரிக்கச் செண்டுகளாக இருக்கும் எனக் கூறினார்.
நியூஸ்லெட்டர்
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications