உலகில் நோபல் பரிசுக்கு என ஒரு தனி மரியாதை இருந்து வருகிறது. கலை இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல்,அமைதி, பொருளாதாம் என பல பிரிவுகளில் சிறந்த கண்டு பிடிப்புகள் மற்றும் படைப்புகளைச் செய்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அப்படி இந்த முறை, பால் ஆர் மில்க்ரோம் (Paul R Milgrom) மற்றும் ராபர்ட் பி வில்சன் (Robert B Wilson) ஆகிய இருவரும் 2020-ம் ஆண்டில் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை வென்று இருக்கிறார்கள்.
இந்த இருவரும் ஏலம் விடும் தியரியை மேம்படுத்தியது மற்றும் புதிய ஏல முறைகளை கண்டு பிடித்ததற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறதாம்.
இது வரை 1969-ம் ஆண்டு தொடங்கி, 2019-ம் ஆண்டு வரை மொத்தம் 51 முறை பொருளாதார அறிவியல் பிரிவில் நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறதாம். 84 பேர் இந்த பொருளாதார பிரிவின் கீழ் நோபல் பரிசு வென்று இருக்கிறார்களாம்.
கடந்த ஆண்டு, நம் இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரின் மனைவில் எஸ்தர் தஃப்லோ (Esther Duflo) இருவரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications