உலகின் மிகப்பெரிய பயணிகள் சேவை விமான நிறுவனமான எமிரேட்ஸ் கடந்த 30 வருடத்தில் முதல் முறையாகக் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புக் காரணமாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
மார்ச் மாத முடிவில் எமிரேட்ஸ் நிறுவனம் சுமார் 6 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக அரபு நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து அரபு நாடுகளுக்கும், பிற நாடுகளுக்கும் விமானச் சேவைகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைக்கப்பட்டது.
இதனால் எமிரேட்ஸ் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தை இழக்க நேரிட்டது. இதன் வாயிலாகக் கடந்த நிதியாண்டில் 22.1 பில்லியன் திராம்ஸ் அல்லது 6 பல்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.
எமிரேட்ஸ் துபாய் அரசு நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்திற்குத் துபாய் அரசு 11.3 பில்லியன் திராம்ஸ் அதாவது 3.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீட்டு உட்செலுத்தியுள்ளது.
இதேபோல் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமான நிலைய சேவை நிறுவனமான dnata அரசு அறிவித்துள்ள 800 மில்லியன் டாலர் அளவிலான உதவி தொகையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் கடந்த நிதியாண்டில் மட்டும் எமிரேட்ஸ் நிறுவனம் சுமார் சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 75,145 ஆகக் குறைந்துள்ளது.