எவர்கிராண்டேவின் மோசமான நிலை.. தள்ளாடும் சீனாவின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவர்கிராண்டே இந்த பெயரால் உலக நாடுகளே சற்று அதிர்ச்சியடைந்தன எனலாம். ஏனெனில் இன்று உலகின் முதல் பொருளாதார நாடாக இருக்கும் சீனாவில், மிகப்பெரிய ரியல் ஜாம்பவான் ஆக இருந்த நிறுவனம் தான் எவர்கிராண்டே.

இந்த நிறுவனம் தான் கடன் பிரச்சனையால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இது கடன் பத்திரங்களுக்கு மட்டும் 84 மில்லியன் வட்டி செலுத்த வேண்டியுள்ளதாக அப்போது செய்திகள் வெளியானது.

ஒரு புறம் உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கே இந்த கதியா? என்ற அதிர்ச்சி இருந்தாலும், எவர்கிராண்டே குழுமம் ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் அல்ல, பற்பல துறைகளிலும் காலூன்றியுள்ளது கவனிக்கதக்கது.

ஒரு வருட சரிவில் சீனா.. மின்சாரம், ரியல் எஸ்டேட் மூலம் பொருளாதாரம் பாதிப்பு..! ஒரு வருட சரிவில் சீனா.. மின்சாரம், ரியல் எஸ்டேட் மூலம் பொருளாதாரம் பாதிப்பு..!

எவர்கிராண்டே குழுமம் பங்கு விற்பனை

எவர்கிராண்டே குழுமம் பங்கு விற்பனை

இவ்வாறு கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்து வரும் எவர்கிராண்டே நிறுவனம், அதன் ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்கிவரும் ஹெங்டென் நெட்வொர்க் குழுமத்தில் தனது முழுப் பங்கினையும் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பங்கின் மதிப்பு 273.5 மில்லியன் டாலராகும். பலத்த கடன் பிரச்சனையில் தவித்து வரும் நிலையில், அதனை குறைக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

பத்திரங்கள் முதிர்வு

பத்திரங்கள் முதிர்வு

எப்படியிருப்பினும் எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தற்போது வரையிலும் கூட இந்த highly likely என்ற தரத்தினை கொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இது ஒரு பெரும் சோதனையை எதிர்கொள்ள போகிறது எனலாம். ஏனெனில் 3.5 பில்லியன் டாலர் மதிப்பான பத்திரங்கள் முதிர்வு அடைய போகின்றன.

எது சாத்தியமா?

எது சாத்தியமா?

மேலும் எவர்கிராண்டே மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனை நாங்கள் இன்னும் நம்புகிறோம் என ஒரு தரப்பு கூறுகின்றனர்.
மறுபுறம் எவர்கிராண்டே நிறுவனம் தற்போது புதிய வீடுகளை விற்கும் திறனை இழந்துவிட்டது. அதன் முக்கிய வணிக மாதிரி செயலிழந்துவிட்டது. ஆக கடனை திருமப செலுத்துவது கடினம். அது சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.

கடன் வாங்கி வணிகம்

கடன் வாங்கி வணிகம்

சீனாவின் மிகப்பெரிய நிறுவனமாக எவர்கிராண்ட் 300 பில்லியன் டாலருக்கு மேல் கடன் வாங்கி விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை குறித்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது சீன அரசு. இதனால் அந்த நிறுவனம் வாங்கிய கடன்களுக்கான வட்டி செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் கடன் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Evergrande's bad situation.. China’s Evergrande group sells streaming platform stake at discount

Evergrande's bad situation.. China’s Evergrande group sells streaming platform stake at discount/ எவர்கிராண்டேவின் மோசமான நிலை.. தள்ளாடும் சீனாவின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.
Story first published: Thursday, November 18, 2021, 20:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X