நியூயார்க்: இன்றைய போட்டி மிகுந்த உலகில் ஒரு நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாக நடத்துவது மிகக் கடினம், அதிலும் சந்தை மதிப்பில் டாப் 10 இடங்களுக்குள் நுழைவது உண்மையிலேயே பலரின் கனவாக மட்டுமே இருக்கும். ஆனால் இந்தக் கனவை நினைவாக்கியுள்ளது பேஸ்புக்.
2004ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம், 52 வருட பழமையான வால்மார்ட் நிறுவனத்தைச் சந்தை மதிப்பில் முந்தியுள்ளது. இதனால் அமெரிக்கச் சந்தையின் எஸ் அண்ட் பி 500 குறியீடு பட்டியலில் டாப் 10 பட்டியலில் பேஸ்புக் நிறுவனம் முதன் முறையாக நுழைந்துள்ளது.
அமெரிக்கச் சந்தை
இச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்கின்றனர். இதனால் டாப் 10 பட்டியலில் பிற துறை நிறுவனங்களைக் காட்டிலும் டெக்னாலஜி நிறுவனங்கள் அதிக இடங்களைப் படித்துள்ளது.
ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகிள் ஆகியவை நிறுவனங்கள் இடம்பிடித்துள்ள இப்பட்டியலில் பேஸ்புக் இணைந்துள்ளது.
வால்மார்ட்
கடந்த 1962ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் தனது சில்லறை வர்த்தகக் கிளைகளை அமைத்துள்ளது.
மேலும் பேஸ்புக் மற்றும் வால்மார்ட் நிறுவன மதிப்பை ஒப்பிடுகையில் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், டாப் 10 பட்டியலில் இருந்து வால்மார்ட் நீக்கப்பட்டது வருத்தமான விஷயம் தான்.
பேஸ்புக்
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.14 டாலர் உயர்ந்து ஒரு பங்கு 87.88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் படி பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 238 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
4 பில்லியன் டாலர் வித்தியாசம்
இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்றை வர்த்தகத்தில் சரிந்ததால், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 234 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இருநிறுவனங்களுக்கு மத்தியில் ஏறத்தாழ 4 பில்லியன் டாலர் வித்தியாசம் மட்டுமே.
ஆப்பிள் நிறுவனம்
டாப் 10 பட்டியில் இடம்பெற்றுள்ள 9 நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவன மதிப்பிற்கு அருகில் கூட நெருங்கவில்லை. இந்நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் சுமார் 735 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications