சான் பிரான்சிஸ்கோ: சமுக வலைதளத்தில் புரட்சியை உருவாக்கிய பேஸ்புக் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டின் வருவாயில் சுமார் 59 சதவீத உயர்வை சந்தித்துள்ளது. ஆனால் தன் வளர்ச்சியை அழித்துவிடும் என்று பயந்து வாட்ஸ் அப் நிறுவனத்தை அதிக விலைக் கொடுத்து பேஸ்புக் நிறுவனம் கைபற்றியது. இதன் விளைவு கைபற்றிய நிறுவனத்தில் நஷ்டம்.
3வது காலாண்டு
செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 59% வளர்ச்சியுடன் 3.2 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 2.02 பில்லியன் டாலர் மட்டுமே பெற்றது குறிப்பிடதக்கது.
பங்கு சந்தை
நியூயார்க் பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகல் நடப்பு நிதியான்டில் மட்டும் 47 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் மட்டும் 1 சதவீதம் சரிந்து 80.20 டாலருக்கு விற்கப்படுகிறது.
வாட்ஸ் அப்
22 பில்லியன் டாலருக்கு கைபற்றிய வாட்ஸ்அப் நிறுவனத்தின் வருவாய் கடந்த வருத்தை விட இந்த வரும் அதிகளவில் உள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் வாட்ஸ்அப் நிறுவநம் 58.5 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தது. ஆனால் 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 232.5 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
விளம்பர வருவாய்
மேலும் பேஸ்புக் நிறுவனம் மொபைல் விளம்பரத்தின் வருவாய் சுமார் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்து வருடம் இதன் வளர்ச்சி வெறும் 49 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடதக்கது.