உலகில் சக்திவாய்ந்த பொருளாதார நாடான அமெரிக்கா பணவீக்கத்தில் மந்தமான நிலையை சந்தித்துள்ள காரணத்தால், வட்டி விகிதத்தை உயர்த்துமா அல்லது பணவீக்கம் அதிகரிக்கும் வரை காத்திருக்குமான என்ற முடிவை புதன்கிழமை எடுக்க உள்ளது.
வட கொரியா உடனான பிரச்சனையை கருத்தில் கொண்டு நிதிதிரட்டும் வகையில் வட்டியை உயர்ந்தினால் அமெரிக்காவில் 4.2 டிரில்லியன் டாலர் பத்திர முதலீட்டு சந்தை மிகப்பெரிய முதலீட்டை ஈர்க்கும்.
மந்தமான சூழ்நிலை
அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி தரவுகள் மந்தமாக இருக்கும் காரணத்தால், நிதி சந்தையை கருத்தில் கொண்டு மத்திய வங்கி வட்டி உயர்வு குறித்த முடிவுகளை எடுக்கும்.
ஜெனெட் ஏலன்
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவரான ஜெனெட் ஏலன்,வட்டி உயர்வு குறித்தி பாலிசி அறிக்கை மற்றும் வர்த்தக கணிப்புகளை மத்திய வங்கியான பெடர்ல் வங்கி கூட்டம் முடிந்த ஒரு மணிநேரத்திற்கு பின் அறிவிப்பார்.
இந்திய பங்குச்சந்தை
பெடரல் வங்கி தனது பத்திரத்திற்கான வட்டியை உயர்த்தினால், இந்திய சந்தையில் இருக்கும் அதிகப்படியான முதலீடு வெளியேறும், இதனால் தட்டுத்துடுமாறி உச்சத்தை அடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மீண்டும் சரிவடையும்.
வாய்ப்புகள்
அமெரிக்க சந்தை பொறுத்த வரையில் இந்த முறை வட்டி உயர்வு இருக்காது என பல நிதியியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இந்த முறை உயர்த்தினால், ஓரே வருடத்தில் மூன்று முறை வட்டி உயர்த்தப்பட்டதாக இருக்கும்.