ஏதென்ஸ்: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருக்கும் கிரீஸ் நாட்டில் நேற்று நிதியுதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் 61 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கிரீஸ் வெற்றிபெற்றது.
இதன் மூலம் கிரீஸ் நாட்டு ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பரிக்கப்படாது.
வாக்குகெடுப்பு
ஞாயிற்றுக்கிழமை கிரீஸ் நாட்டு முழுவதும் நடக்கப்பட்ட வாக்கெடுப்பில் சுமார் 6.16 மில்லியன் மக்கள் கலந்துக் கெண்டனர். இவ்வாக்கெடுப்பில் கிரீஸ் நாட்டிற்கு 61.31 வாக்குகளும் ஐரோப்பிய சந்தைக்குச் சாதகமாக 38.69 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது.
40% வாக்குகள்
வாக்குகெடுப்புகளின் முடிவுகளைப் பரிசீலனை செய்ய, குறைந்தது 40 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஐரேப்பிய சந்தைக்குச் சாதகமாக வெறும் 38 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இதனால் கிரீஸ் நாட்டிற்கு முழுமையான வெற்றிக் கிடைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை
வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதை அடுத்துச் செவ்வாய்க்கிழமை 19 நாடுகளின் தலைவர்களும் நிதியுதவி மற்றும் புதிய திட்ட ஆலோசனைகளுக்காக முக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
அலெக்சிஸ் சிப்ரஸ்
இந்த வெற்றி நம்மை ஐரோப்பிய கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதைத் தடுக்கும் வெற்றியாகப் பார்க்க முடியாது. கிரீஸ் நாட்டைப் பொருளாதார ரீதியில் வலிமைபடுத்த ஒரு வாய்ப்பாகவே கருத வேண்டும் என அலெக்சிஸ் சிப்ரஸ் வாக்கெடுப்புகள் வெளியான பின் மக்களுக்குச் செய்தி வெளியிட்டார்.
வெற்றி களைப்பில் போராட்டம்
கிரீஸ் நாட்டிற்குச் சாதகமாக வாக்கு அளித்த மக்கள் வெற்றிக்களைப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டும் அல்லாமல் போலிஸ் அதிகாரிகளையும் தாக்கினர்.
ஆசிய சந்தை
கிரீஸ் நாட்டிற்குச் சாதகமான சூழ்நிலை அமைந்துள்ளதால், திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தை கணிசமான சரிவை சந்தித்தது.