நியூயார்க்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 10 நாள் பயணமாகப் புதன்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். இப்பயணத்தின் முதல் நாளான நேற்று உலகிலேயே மிகப் பெரிய பங்குச் சந்தை தளமான நியூயார்க் பங்குச்சந்தையைப் புதன்கிழமை வர்த்தக நாள் முடிவில் மணியடித்து முடித்து வைத்தார்.
இப்பயணத்தில் அமெரிக்காவின் பல நிறுவன தலைவர்கள் மற்றும்ோ அரசுத் துறை அதிகாரிகளைச் சந்திக்க உள்ளார்.
நிறுவன தலைவர்கள்
இப்பயணத்தில் அம்பூஜா நியோடியா நிறுவனத் தலைவர் ஹர்ஷவர்த்தன் நியோடியா மற்றும் அப்பலோ டையர்ஸ், பார்தி எண்டர்பிரைசர்ஸ், பாரத் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவன தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
பங்குச்சந்தை முடிவு
பெடரல் வங்கியின் பாலிஸி மறுஆய்வு கொள்கை ஆலோசனை கூட்டத்தின் காரணமாக நியூயார்க் பங்குச்சந்தை புதன்கிழமை வர்த்தகத்தில் மிவும் சிறப்பாகச் செயல்பட்டு இருந்தது.
இந்நிலையில் சிறப்பிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் அருண் ஜேட்லி சந்தையை முடித்து வைத்தார்.
செய்திகள்
இச்செய்தி அமெரிக்கா ஊடகங்களில் சிறப்புச் செய்தியாகவும், பத்திரிக்கையில் முக்கிய இடத்தையும் பெற்றது.
நியூயார்க் பங்குச்சந்தை
இச்சந்தையில் இந்திய நிறுவனங்களான ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
ஜூன் 24
இந்திய பயணத்திற்கு முன் நியூயார்க்கில் உள்ள நிதியமைச்சர் வாஷிங்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு முக்கியக் கூட்டங்களுக்காகச் செல்ல உள்ளார்.