தாய்லாந்தில் தங்கி, சிங்கப்பூரில் வேலை பார்த்த கூகுள் ஊழியர்.. அடுத்தது என்ன நடந்தது தெரியுமா..?

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் , பணி நீக்கம் செய்த பிறகு தான் வாழ்க்கையில் தனக்கு நிம்மதி கிடைத்திருப்பதாக பதிவு செய்திருக்கிறார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் சாவோ சன் சென், இவர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் . 10 ஆண்டுகளாக இவர் கூகுளின் சிங்கப்பூர் அலுவலகத்தில் வாரத்திற்கு 40 மணி நேரங்கள் வேலை செய்தாராம். இந்த சூழலில் தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென கூகுள் நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கியது.

தாய்லாந்தில் தங்கி, சிங்கப்பூரில் வேலை பார்த்த கூகுள் ஊழியர்.. அடுத்தது என்ன நடந்தது தெரியுமா..?

கூகுள் நிறுவனம் தன்னை பணி நீக்கம் செய்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த சாவோ சன்னுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுதான் அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது. 39 வயதாக கூடிய அவர் தாய்லாந்தில் வசித்து வருகிறார் ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூருக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய தேசிய பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு மூன்று மணி நேரங்கள் மட்டுமே பேராசிரியராக வேலை செய்கிறார்.

இதன் மூலம் அவருக்கு மாதத்திற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 2.6 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கிறதாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதாக தெரிவிக்கும் அவர் இந்த பணமே தற்போது தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கான செலவினங்களுக்கு போதுமானதாக இருக்கிறது நான் இப்போது நிம்மதியாக உணர்கிறேன் என தெரிவித்திருக்கிறார் .சிங்கப்பூரில் நான் வாரத்திற்கு மூன்று மணி நேரம் வேலை செய்தாலே போதும் தாய்லாந்தில் என்னுடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து செலவினங்களையும் என்னால் மேற்கொள்ள முடிகிறது என தெரிவிக்கிறார்.

கூகுள் நிறுவனம் என்னை பணிநீக்கம் செய்த பிறகு தான் நான் வாழ்க்கையில் பல விஷயங்களை உணர்ந்தேன் குறிப்பாக நிதி சார்ந்த சுதந்திரம் எது என்பதை நான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து இருக்கிறேன் 10 ஆண்டுகளில் என் வாழ்வின் பாதிக்கும் ஏற்பட்ட நாட்களை கூகுள் நிறுவனத்தில் தான் இருந்திருக்கிறேன் ஆனால் திடீரென அவர்கள் என்னை பணியிலிருந்து நீக்கி விட்டனர் என கூறுகிறார்.

கூகுள் நிறுவனத்தில் வேலையில் இருந்த போதே ஓய்வு காலத்திற்கு என 17 கோடி அளவிற்கு முதலீடு செய்து வைத்திருந்ததாகவும், அந்த முதலீடும் தற்போது எனக்கு உதவுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மீண்டும் ஒரு கார்ப்பரேட் வேலைக்கு செல்ல வேண்டாம் என்பதால் தான் நான் பேராசிரியர் பணியை தேர்ந்தெடுத்தேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். யூடியூப் சேனல் வாயிலாகவும் தனக்கு தற்போது போதுமான வருமானம் வருவதாக தெரிவித்திருக்கிறார் . கூகுள் என்னை பணிநீக்கம் செய்த பிறகு நான் என் குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் அதிகமாக இருக்கிறது என்னுடைய வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது இதற்கு நான் கூகுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என தெரிவிக்கிறார்.

FAQs
சாவோ சன் சென் பணியில் இருந்த போதே எவ்வளவு முதலீடு செய்தார்?

கூகுளில் வேலைசெய்து வந்த காலத்திலேயே இவர் எதிர்கால தேவைக்காக 17 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளார்.

கூகுளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அவர் இப்போது என்ன செய்கிறார்?

கூகுளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவு பேராசிரியராக வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்.

யார் இந்த சாவோ சன் சென்? இவர் ஏன் தற்போது பிரபலமாகியுள்ளார்?

10 ஆண்டு காலம் கூகுளில் வேலை செய்த இவர் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கத்துக்கு பிறகு வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே வேலை செய்தாலும் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதாக கூறுகிறார்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+