டப்ளின்: எலான் மஸ்கின் மின்னஞ்சலுக்கு பதிலளிக்காததற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ட்விட்டர் ஊழியருக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பணியாளர்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரி ரூனி என்பவர் முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட எக்ஸ் வலைதளத்தில் பணி புரிந்தவர்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர் எலான் மஸ்கின் மின்னஞ்சலுக்கு பதிலளிக்கவில்லை என்ற காரணத்திற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டார். டப்ளினில் எக்ஸ் நிறுவன தலைமையகத்தில் வேலை செய்து வந்தவர் இவர். எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்னர் அனைத்து ஊழியர்களுக்கும் அவர் சார்பில் மின்னஞ்சல் அனுப்பபப்ட்டது.

அதாவது வேலை அட்டவணையை மிகச் சரியாக பின்பற்ற வேண்டும் இல்லையெனில் ராஜினாமா செய்து விடுங்கள் என எலான் மஸ்க் மின்னஞ்சல் அனுப்பி இருந்ததாக தெரிகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் இந்த மின்னஞ்சலை அனுப்பி உள்ளார்.
அதில் நீண்ட நேரம் மிகத் தீவிரமாக வேலை செய்ய வேண்டும், மிக சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு மட்டுமே இங்கே வேலை உண்டு மற்றவர்களுக்கு கிடையாது என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிபந்தனைகளுக்கு எல்லாம் ஆம் என்பதை கிளிக் செய்பவர்கள் நிறுவனத்தில் இருப்பார்கள் கிளிக் செய்யாதவர்கள் வேலையில் இருந்து அனுப்பப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது .
இதனிடையே இந்த மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பவில்லை என்பதால் மூன்று நாட்களுக்குப் பிறகு நிறுவனத்தின் தலைமை மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியிடம் இருந்து வேலையில் இருந்து தானாகவே விலகிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ரூனிக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதனால் கடுப்பாகிய ரூனி எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அயர்லாந்தின் பணியாளர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆம் என்பதை கிளிக் செய்யாத ஒரே காரணத்திற்காக தான் வேலையில் இருந்து விலக முடிவெடுத்து விட்டதாக கருதி , வேலையில் இருந்து தானாக விலகி விடும்படி மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர் என தன்னுடைய புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரனை விசாரித்த அயர்லாந்து வொர்க்பிளேஸ் ரிலேஷன் கமிஷன் (Ireland's Workplace Relations Commission (WRC)) எக்ஸ் நிறுவனம் அவருக்கு 5 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாயமற்ற முறையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications