உக்ரைன் - ரஷ்யா இடையேயான தாக்குதலானது ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டுள்ளது. எனினும் இன்று இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ள நிலையில், சற்றே தாக்குதல் ஓய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான மோதலில் அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் உக்ரைன் தலை நகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்தது.
பதற்றம்
ஏற்கனவே அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்து வரும் மக்கள், உக்ரைனை விட்டு தொடர்ந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த இடைவெளியானது மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தாலும், இதிலிருந்து சுமூக நிலை எட்டப்பட வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
பொருளாதார தடை
முன்னதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையில் நிதி ரீதியாகவும் ஸ்விப்ட் ஆப்சனை தடை விதிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில் பல நாட்டினை சேர்ந்த நிறுவனங்களும், ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவினை முறித்துக் கொண்டு வருகின்றன.
வணிக உறவு வேண்டாம்
ஜெர்மனியின் டைம்லர் டிரக் நிறுவனம், ரஷ்யாவின் கமாஸுடனான வணிக நடவடிக்கைகளை உடனடியான நிறுத்தி வைப்பது என்ற முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிறுவனம் ராணுவ தளவாட உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், ரஷ்ய நிறுவனத்துடனான உறவினை முறித்துக் கொள்வதாக டைம்லர் தெரிவித்துள்ளது.
ராணுவ வாகனம் தயாரிப்பாளர்
டைம்லர் நிறுவனமும், கமாஸ் நிறுவனமும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டு முயற்சியின் மத்தியில் கமாஸ் மெர்சிடிஸ் டிரக்குகள் மற்றும் கேபின்களை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றது. சோவியத் யூனியனின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் ஒரு புறம் டைம்லருடன் இணைந்து செயல்பட்டு வந்தாலும், மறுபுறம் ரஷ்யாவின் ஆயுத படைகளுக்கு தேவையான வாகனங்களையும் உற்பத்தி செய்து வருகின்றது.
லாபத்தில் இழப்பு
டைம்லர் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவானது லாபத்தில் இழப்பினை ஏற்படுத்தலாம். எனினும் டிரக் தயாரிப்பாளர் ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யாவில் சில ஆயிரம் யூனிட்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரஷ்யாவுக்கு தான் இழப்பு
இதே போல ஐரோப்பியா பெரு நிறுவனங்களும், ரஷ்ய நிறுவனங்கள் உடனான உறவுகளை துண்டிக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளன எனலாம். நிச்சயம் இதனால் ரஷ்ய நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு தான். இது ரஷ்ய பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம். இந்த நிலையில் தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளது. இதன் மூலம் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே இங்கு அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications