சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும் என கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் சாட் ஜிபிடியின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில் சீனாவின் டீப்சீக் செயலி இந்த போட்டியை மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் போட்டியை எதிர்கொள்ள ஊழியர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என கூகுள் தலைமை கேட்டு கொண்டுள்ளது.

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் கூகுளின் Artificial General Intelligence டீமில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக செர்ஜி பிரின், ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூகுளின் ஏஐ ப்ராஜெக்ட் மற்றும் ஜெமினி உள்ளிட்டவற்றில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் போட்டியை நாம் எதிர் கொள்ள வேண்டும் என்றால் கூடுதல் நேரம் வேலை செய்தாக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு ஊழியர்களும் 60 மணி நேரங்களுக்கும் குறைவாகவே வேலை செய்கிறார்கள் , இவர்கள் சரியாக செயல்படாதது மட்டுமில்லாமல் கடினமாக உழைக்கும் நபர்களுக்கும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றனர் என மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருப்பதாக ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் ஊழியர்கள் தங்களுடைய கோடிங் உள்ளிட்ட வேலைகளுக்காக ஏஐ தொழில்நுட்பத்தையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். 60 மணி நேரத்திற்கு மேல் யாரும் வேலை செய்ய வேண்டாம் அது உங்களை சோர்வடைய செய்துவிடும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொதுவாக நிறுவனங்கள் வாரத்திற்கு 40 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை அறிவுறுத்துகின்றன. ஆனால் அதைத் தாண்டி கூடுதலாக 20 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இவர் கூறியுள்ளார்.
Artificial General Intelligence தொழில்நுட்பத்தில் கூகுள் மிக தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறது. அதாவது மனிதர்களை விட திறன் கொண்டதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே தான் ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications