சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும் என கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் சாட் ஜிபிடியின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில் சீனாவின் டீப்சீக் செயலி இந்த போட்டியை மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் போட்டியை எதிர்கொள்ள ஊழியர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என கூகுள் தலைமை கேட்டு கொண்டுள்ளது.

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் கூகுளின் Artificial General Intelligence டீமில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக செர்ஜி பிரின், ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூகுளின் ஏஐ ப்ராஜெக்ட் மற்றும் ஜெமினி உள்ளிட்டவற்றில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் போட்டியை நாம் எதிர் கொள்ள வேண்டும் என்றால் கூடுதல் நேரம் வேலை செய்தாக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு ஊழியர்களும் 60 மணி நேரங்களுக்கும் குறைவாகவே வேலை செய்கிறார்கள் , இவர்கள் சரியாக செயல்படாதது மட்டுமில்லாமல் கடினமாக உழைக்கும் நபர்களுக்கும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றனர் என மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருப்பதாக ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் ஊழியர்கள் தங்களுடைய கோடிங் உள்ளிட்ட வேலைகளுக்காக ஏஐ தொழில்நுட்பத்தையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். 60 மணி நேரத்திற்கு மேல் யாரும் வேலை செய்ய வேண்டாம் அது உங்களை சோர்வடைய செய்துவிடும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொதுவாக நிறுவனங்கள் வாரத்திற்கு 40 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை அறிவுறுத்துகின்றன. ஆனால் அதைத் தாண்டி கூடுதலாக 20 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இவர் கூறியுள்ளார்.
Artificial General Intelligence தொழில்நுட்பத்தில் கூகுள் மிக தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறது. அதாவது மனிதர்களை விட திறன் கொண்டதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே தான் ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications