நியூயார்க்: உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் இணைய தேடுதல் தளமான கூகிள் 2015ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17.7 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.
இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை அறிவித்தது.
இலக்கு 18... கிடைத்தது 11..
கடந்த வருடத்தை ஓப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருவாய் 11 சதவீதம் உயர்ந்திருந்தாலும், நாணய வீழ்ச்சியின் காரணமாக இந்நிறுவனத்தின் வருவாய் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.
ரகசியம்
கூகிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திரா தகவல்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளக் கடைசி 6வது ஸ்டைலரை பார்க்கவும்.
18 சதவீத உயர்வு!
நாணய மதிப்பு நிலையாக இருந்திருந்தால் நிறுவனத்தின் வருவாய் 18 சதவீதம் வரை அதிகரித்திருக்கும் என கூகுள் கூறுகிறது.
நிகர வருவாய்
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் சந்தை கணிப்புகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும் 17.7 பில்லியன் டாலரை பெற்று வர்த்தகத்தில் நிலைபெற்றுள்ளது.
சந்தை கணிப்புகளின் படி இதன் அளவு 17.79 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது.
பங்குச் சந்தை
இந்நிறுவன முடிவுகள் வெளியான உடன் அமெரிக்க பங்குச்சந்தையில் கூகிள் நிறுவன பங்குகள் சுமார் 11 சதவீதம் உயர்ந்தது.
கூகிள் சதி..
கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தான் பெரும்பாலான மக்கள் இன்று பயன்படுத்துவது.
இந்நிலையில் கூகிள் நிறுவனம் நீங்கள் தேடப்படும், பதிவு செய்ப்படும், அனைத்து விதமான பதிவுகளையும் கூகிள் கண்காணித்துப் பதிவு செய்து வருகிறது.
டிக்கெட்
உதாரணமாக நீங்கள் ஜிமெயில் மூலம் உங்கள் நண்பரிடம் பணப் பரிமாற்றத்திற்காக வங்கிக் கணக்குகள் குறித்த விபரங்களைக் கேட்பதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் அவருக்கு அது ஆபத்து மிகுந்த மின்னஞசால காண்பிக்கும். இதன் மூலம் உங்களது மின்னஞசில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கூகிள் படிக்கிறது.
ஸ்மார்ட்போனில்
மற்றொன்று: ஸ்மார்ட்போனில் குரோம் ஆ பயன்படுத்தி நீங்கள் விமான அல்லது ரயில் டிக்கெட்களைப் பதிவிறக்கம் செய்தால், பயணத்திற்கு முன்பு உங்களுக்கு அதன் குறித்த ரிமைன்டர் கிடைக்கும்.
இது நீங்கள் செட் செய்யத் தேவையில்லை.
என்ன வழி
இத்தகைய தகவல்களை அளிக்க நீங்கள் மறுத்தால், incognito தளத்தில் உங்கள் தேடுதல் பதிவிகளைச் செய்யுங்கள்.