கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் கடந்த 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்காக மட்டும் 68 கோடி ரூபாயை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார. சுந்தர் பிச்சை 2015 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார். 2019 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஆல்பபெட் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனை அடுத்து ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2019 ஆம் ஆண்டு முதல் இவர் பதவி வகித்து வருகிறார்.

உலகம் முழுவதும் தேடுபொறியில் தொடங்கி பல்வேறு தளங்களிலும் கூகுள் தான் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இருக்கிறது. அத்தகைய மிகப்பெரிய நிறுவனத்தை கட்டி ஆண்டு வருபவர் தான் சுந்தர் பிச்சை. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக மட்டும் கூகுள் நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 68 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது.
கூகுள் நிறுவனம் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனத்தின் செலவினங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக 57.48 கோடி ரூபாயை செலவு செய்த கூகுள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் 22 சதவீதம் கூடுதலாக சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக மட்டும் செலவு செய்திருக்கிறது.
சுந்தர் பிச்சையின் வீட்டிற்கு வழங்கப்படும் பாதுகாப்பு, அவரது பாதுகாப்புக்கான ஆலோசனைகள் ,கண்காணிப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பயணம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றிற்காக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் சுந்தர் பிச்சைக்கு பாதுகாப்புக்காக செலவு செய்யப்பட்டுள்ள இந்த தொகையானது தலைமை செயல் அதிகாரி பொறுப்பின் மூலம் அவருக்கு கிடைக்கும் தனிப்பட்ட பலன்களுக்குள் வராது என கூகுள் நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.
சுந்தர் பிச்சையின் தொழில் முறை பொறுப்பை கவனத்தில் கொண்டு தான் நிறுவனமே இந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது என கூறியுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை அதிக இடங்களுக்கு பயணம் செய்ததே அவருக்கான பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications