பிரஸ்ஸல்ஸ்: நிதியுதவிக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இழந்த கிரீஸ், ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இவ்வாக்கெடுப்பில் ஐரோப்பிய கவுன்சில் தனது 19 நாடுகளையும் கிரீஸ் நாட்டிற்குச் சாதகமாக வாக்களிக்கக் கேட்டுக்கொண்டது. ஆனாலும் வாக்குப்பதிவில் கிரீஸ் நாட்டிற்காகச் சாதகமான பதில் கிடைக்கும் என எந்தவிதிமான நம்பிக்கையும் இல்லை என்ற கருத்து நிலவுகிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையும் கவலையில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு அளிக்க வேண்டிய தவணை செலுத்த இன்றே (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள். தவணையைச் செலுத்தாவிட்டால் யூரோ நாணயைத்தை பயன்படுத்தும் 19 ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ் திவாலாக அறிவிக்கப்பட்டு, விலக்கி வைக்கப்படும்.
தவணை தொகையின் அளவு 1.8 பில்லியன் யூரோ.
ஐரோப்பிய தலைவர்கள்
மேலும் நாட்டை ஐரோப்பிய கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள வாக்கெடுப்பு நடத்தினாலே, கூட்டணியில் இருந்து கிரீஸ் விலக்கப்படுவதாகப் பொருள் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய கமிஷன்
கிரீஸ் நாட்டிற்காக நிதியுதவி பெற பல கட்ட முயற்சிகள் செய்தும் முதலீட்டாளர்களுக்குக் கிரீஸ் நாட்டின் மீது நம்பிக்கை பெறவில்லை என ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜன்கர் தெரிவித்தார்.
ஏஞ்சலா மெர்க்கல்
ஜெர்மனியின் அதிபரான ஏஞ்சலா மெர்க்கல் கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடி குறித்து இரு முறை செய்தியாளர்களிடம் பேசினார்,. அப்போது, "யூரோ தோற்றுப்போனால் மொத்த ஐரோப்பாவும் தோற்றுப்போகும்" எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் கிரீஸ் நாட்டின் பிணை திட்டத்தையும் ஆய்வு செய்துள்ளார்.
அலெக்ஸ் சிப்ரஸ்
கடந்த வாரம் இந்நாட்டின் பிரதமர் நிதியுதவி இல்லாவிட்டால் நாடு மொத்தமும் முடங்கிவிடும் நிலையில் புதிய திட்டத்தை வகுத்தார். இதில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக நாட்டு மக்களின் ஒய்வுதியத்தில் சில சதவீத படித்ததை அறிவித்தார்.
இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது.
கண்டிப்பாக முடியாது..
திங்கட்கிழமை இரவு செய்தி நிறுவனத்திற்கு அலெக்ஸ் சிப்ரஸ் அளித்த பேட்டியில், கிரீஸ் வங்கிகள் கடனில் மூழ்கித் தவிக்கும்போது எப்படித் தவணையைச் செலுத்த முடியும் எனச் சிப்ரஸ் வெளிப்படையாக அறிவித்தார்.
மக்கள் பீதி...
கடந்த ஞாயற்றுக்கிழமை இந்நாட்டு வங்கிகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், மக்களின் பணத்தைக் கொண்டு கிரீஸ் தவணையை அளிக்குமா என்ற சந்தேகம் நாட்டு மக்கள் மத்தியில் பரவத் துவங்கியது.
மேலும் அரசின் இம்முடிவிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து. இரவு பகலாகத் தங்களது பணத்தை எடுத்துக்கொள்ள ஏடிஎம் இயந்திரத்தின் முன் உள்ளனர்.
வங்கி சேவை முடக்கம்
நிதியுதவி அளிக்க முடியாது என ஐரோப்பிய சென்டரல் வங்கி கடந்த ஞாயற்றுக்கிழமை அறிவித்துவிட்ட நிலையில், கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்ஸ் சிப்ரஸ் இந்நாட்டு வங்கிகளை அடுத்த ஒரு வாரத்திற்கு மூட உத்திரவிட்டார்.
இதனால் இந்நாட்டுப் பங்குச்சந்தையும் முடங்கியது.
ஏடிஎம்
மேலும் ஏடிஎம் சேவைகளிலும் ஒரு நாளில் 60 யூரோ வரை மட்டுமே எடுத்துக்கொள்ளக் கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications