ஏதென்ஸ்: நிதியுதவிக்கான வாக்கெடுப்புக் கிரீஸ் நாட்டிற்குச் சாதகமான நிலையை எட்டியதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை இந்நாட்டின் நிதியமைச்சர் யானீஸ் வரோஃபகீஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பொது வாக்கெடுப்பு முடிவுகள் ஐரோப்பிய சந்தைக்குச் சாதகமாக இருந்தால், தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடந்த வாரம் யானீஸ் கூறினார். ஆனால் வாக்கெடுப்புக் கிரீஸ் நாட்டிற்குச் சாதகமான அமைந்த போதிலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
யானீஸ் வரோஃபகீஸ்
இதுகுறித்து யானீஸ் வரோஃபகீஸ் கூறுகையில், "ஐரோப்பிய நிதியமைச்சர் கூட்டத்திற்கு ஐரோப்பிய தலைவர்கள் சிலர் தன்னை வேண்டாதவராகக் கருதிகிறார்கள்" மேலும் கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி பெறுவதற்காகப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் தன்னைப் பதிவி விலகக் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக மட்டுமே தான் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டார்.
மோதல்
நேற்றைய வெற்றியை கிரீஸ் மக்கள் தலைநகர் ஏதென்ஸ் நகரில் கோலாகலமாகக் கொண்டாடினர். இக்கெண்டாட்டத்தில் கீரிஸ் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் வெடித்தது. இதனால் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தது.
ஏஞ்சலா மெர்கல்
கிரீஸ் வெற்றியைக் குறித்து ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹாலண்டே ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
ஐரோப்பிய சென்டரல் வங்கி
கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி திட்டம் குறித்து அவரச ஆலோசனை கூட்டமும் திங்கட்கிழமை ஐரோப்பிய சென்டரல் வங்கி மேற்கொள்கிறது.


Click it and Unblock the Notifications