ஏதென்ஸ்: ஐரோப்பிய சந்தையின் டைம் பாம் எனச் சித்தரிக்கப்படும் கிரீஸ் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் சமர்ப்பித்த புதிய திட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன், ஐஎம்எப் தலைவர்கள் முதற்கட்ட ஒப்புதல்களை அளித்துள்ளனர்.

பொது வாக்கெடுப்பில் கிரீஸ் வெற்றி பெற்ற நிலையில், ஐரோப்பிய கூட்டணி தலைவர்களிடம் 3 வருட கடன் திட்டத்துடன் நிதியுதவி கோரிய கிரீஸ் பிரதமருக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
இதன்பின் ஐரோப்பிய கூட்டணி தலைவர்கள் அடுத்த 5 நாட்களுக்குள் புதிய திட்டத்தை வடிவமைக்கும் மாறும் கிரீஸ் பிரதமரை அறிவுறுத்தினர்.

தற்போது சமர்ப்பித்துள்ள புதிய திட்டத்திற்கு ஐரோப்பிய நிதியமைச்சர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கும் முன், கிரீஸ் நாட்டின் திட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐஎம்எப் அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது.
மேலும் கிரீஸ் அமைச்சர்கள் சனிக்கிழமை தனது புதிய திட்டங்களுடன் ஐரோப்பிய கூட்டணி நிதியமைச்சர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க உள்ளனர். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி கிடைப்பது நிச்சயம்.


Click it and Unblock the Notifications