எச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்யும் ஊழியர்களின் மனைவிக்கான எச்-4 விசா தடை குறித்த சட்டம் ஈயற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்று டொனால்டு டிரம்ப் தலைமையான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு கொண்டு வர இருக்கும் இந்த எச்-4 விசா தடை சட்டத்தால் ஆயிரம் கணக்கான இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும்.
எச்-4 விசா
எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்கள் அவர்களது மணைவி அல்லது அவர்களுடன் இரத்த பந்தங்களாக உள்ளவர்களை எச்-4 விசா கீழ் பணி செய்ய அனுமதிக்கும்.
எச்-1பி விசாவை அதிகளவில் இந்திய ஐடி ஊழியர்கள் பயன்படுத்துவதை போன்றே பலர் எச்-4 விசாவை பயன்படுத்தி தங்களைச் சார்ந்து உள்ளவர்களை அமெரிக்க அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
வேலை வாய்ப்பு
எச்-4 விசா வாயிலாகவும் வெளிநாட்டவர்கள் அமரிக்கா குடிபெயர்ந்து அதிகளவில் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களாலும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதுகாப்பு பறிபோவதாக அதற்கு எதிராக டிரம்ப் தலைமையிலான அரசு கடும் சட்டங்களைக் கொண்டு வர இருக்கிறது.
இந்தியர்கள் பாதிப்பு
அமெரிக்க அரசு எச்-1பி விசாவிற்கு எடுத்து வரும் நடவடிக்கையினால் ஏற்கனவே இந்தியர்கள் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எச்-4 விசா தடையினை அடுத்துக் குறைந்து 70,000 இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது.
ஒபாமா
எச்-4 விசா முறையானது ஒபாமா அரசால் கொண்டு வரப்பட்ட குடியேற்ற சட்டமாகும். அப்பேதில் இருந்து ஒபாமாவை டிரம்ப் கடுமையாக ஒபாமாவின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்த நிலையில் அவர் கொண்டு வந்த சட்டத்தினை முழுமையாக நீக்க முடிவு செய்துள்ளார்.
தகவல்
எச்-4 விசா முறை நீக்க நடவைக்கான சீர்திருத்த சட்டங்கள் இறுதி நிலையை எட்ட உள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததனை அடுத்து அதன் நிலை தெரியவந்துள்ளது.
எப்போது தடை அறிவிப்பு வரும்?
மேலும் எச்-4 விசா தடை குறித்து இறுதி அறிவிப்பை அமெரிக்க அரசு ஜூன் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் எச்-1பி விசா விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமைபடுத்தியும் வருகிறது.
இந்தியா
2017-ம் ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்கா செல்வதும் குறைந்துள்ளது. ஆனால் பிற நாடுகளை விட இந்தியர்கள் அதிகளவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்கா சென்று வருவதால் இந்தியர்களை எச்-1பி விசா பெறுவதில் இருந்து முழுமையாகக் குறைப்பது என்பது சாத்தியமே இல்லை.
இந்திய நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு 6,673 எச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளனர்.