அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கடந்த சில வாரங்களாக ஒரு பெரிய அரசியல் மற்றும் சட்ட விவகாரத்தில் சிக்கியுள்ளது. டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், பல்கலைக்கழகத்தில் உள்ள எதிர்ப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்படும் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.18,000 கோடி) மதிப்பிலான அரசுத் திட்ட நிதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக் கழகம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது கல்விச் சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் அரசின் அதிகார வரம்பு குறித்து பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

2025 ஏப்ரல் 11 அன்று, டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு மாணவர் மன்றங்களின் அங்கீகாரத்தை நிறுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கிறார்களா என்பதை நாம் ஆராய வேண்டும் என்றும் அமெரிக்க மதிப்புகளுக்கு எதிரான வெளிநாட்டு மாணவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை நாம் சரிபார்க்க வேண்டும் என்றும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் இருந்தது.
இந்த கடிதத்திற்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு தெளிவான மறுப்பு அறிவிப்பை வெளியிட்டது. பல்கலைக்கழகத் தலைவர் ஆலன் கார்பர், இது அரசியல் மற்றும் சுதந்திர உரிமைகளை மீறும் செயலாகும். கல்வி சுதந்திரம் என்பது அமெரிக்காவின் அடிப்படையான உரிமைகளில் ஒன்று" என தெரிவித்தார். இது மட்டுமல்லாமல், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக்க முடியாது என்றும், "நாங்கள் கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படையான விவாதத்திற்காக நிற்போம்" என்றும் கூறியது.
ஹார்வர்ட் தனது பதிலை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள், அமெரிக்க அரசு அதிரடியாக செயல்பட்டு, பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் 2.2 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசு நிதியை தற்காலிகமாக நிறுத்தியது. இந்த நிதி மருத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய ஆராய்ச்சித் துறைகளில் பயன்படுத்தப் படுவதால், பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 21 அன்று, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பாஸ்டன் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், அரசாங்கத்தின் நடவடிக்கை "தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது" என்றும், சிவில் உரிமைகள் சட்டத்தின் முதல் திருத்தம்(First Amendment) மற்றும் சிவில் உரிமைகள் சட்டம் (Title VI of the Civil Rights Act) ஆகியவற்றை மீறுவதாகவும் ஹார்வர்ட் கூறியது. நிதியுதவி இல்லாமல் ஆராய்ச்சி திட்டங்களை நிறுத்துவது அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் எதிரான செயலாகும்.
வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வெள்ளை மாளிகை(White House) பேச்சாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ், "அரசுத் திட்ட உதவி என்பது உரிமை அல்ல, அது ஒரு சலுகை மட்டுமே. ஹார்வர்ட் இந்த அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை" என கடுமையாக விமர்சித்தார். மேலும், ஹார்வர்ட் போன்ற நிறுவனங்கள், பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்துகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் மற்றும் அமெரிக்க கல்வி கவுன்சில், ஹார்வர்ட்டின் நடவடிக்கையை ஆதரித்து வெளியிட்ட அறிக்கைகளில் பல கருத்துகளை வெளியிட்டனர், அரசு தனது அதிகாரத்தை மீறி கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த முயல்கிறது என்றும் இது ஜனநாயகத்துக்கும் கல்விச் சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும் ஹார்வர்ட் எடுத்திருக்கும் சட்ட நடவடிக்கை மிகவும் அவசியமான ஒன்று என்றும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு, அமெரிக்கக் கல்வி துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். டிரம்ப் நிர்வாகம், பல்கலைக்கழகங்களை 'மருந்தற்ற இடவசதி' என விமர்சித்து. அரசு, பல்கலைக்கழகங்களை அரசியல் மற்றும் மதத்துடன் தொடர்புடைய இடங்களாக பார்க்கிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகமும், டிரம்ப் நிர்வாகமும் இடையே ஏற்பட்டுள்ள இந்த சட்ட சண்டை, அமெரிக்காவின் கல்வி, சட்டம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் மேல் ஒரு மிக முக்கியமான சோதனை ஆகும். அரசுத் திட்ட நிதிகள் ஒரு சலுகையா? அல்லது கல்வி சுதந்திரம் ஒரு உரிமையா? என்ற கேள்விகளுக்கு இந்த வழக்கு விடை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த வழக்கு வெறும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை மட்டுமல்ல, அமெரிக்காவிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான வழிகாட்டியாக மாறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications