ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு!! வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்!!

ரஷ்யாவில் தற்போது பனிக்காலம், வழக்கமாகவே பனிக்காலம் என்றால் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களிலும் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக தலைநகர் மாஸ்கோ மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு நகரங்களிலும் தொடர்ச்சியாக பனி கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரமாக இரவு பகல் மாறாமல் தொடர்ந்து பனி கொட்டிக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு!! வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்!!

பாதைகள் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாத அளவிற்கு பனி கொட்டி கிடக்கிறது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை பட்டிருக்கிறது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பனியால் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.

வீட்டு நுழைவாயில்களில் எல்லாம் பனி மூடியுள்ளதால் கதவை திறந்தாலே பனியை அகற்றிவிட்டு தான் வெளியே வர முடியும். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியாக பனி பெய்து வருவதாக ரஷ்ய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை என்றும் இன்னும் சில நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகக் கடுமையான பனிப்பொழிவுகளில் இதுவும் ஒன்று என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பனியை அகற்றும் வேலை ஒருபுறம் வேகமாக நடைபெற்று வந்தாலும் மற்றொருபுறம் பனி பெய்த வண்ணமே இருக்கிறது.

ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கி தற்போது வரை பனிப்பொழிவு அங்கே நீடிக்கிறது. குறிப்பாக ரஷ்யாவின் கம்சத்கா பிராந்தியத்தில் மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. பனிப்புயல் காரணமாக நகரங்கள் முழுவதுமே பனியால் போர்த்தப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பொழிய வேண்டிய பனி சில நாட்களிலேயே கொட்டி தீர்த்து விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 6.5 அடிக்கு மேல் பனி குவிந்து கிடக்கிறது.

தற்போது இந்த பிராந்தியத்தில் அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு பேர் வரை பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களிலும் வாகனங்கள், குடியிருப்புகள் அனைத்தும் பனியில் சிக்கி இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கின்றன.

புவி வெப்பமயமாதலால் பருவநிலை மாற்ற மாறுபாடுகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இதனால் தான் பல இடங்களில் வரலாறு காணாத வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக அதீத மழை, வெள்ளம், புயல், பனிப்பொழிவு , மறுபுறம் வறட்சி , போதிய மழையின்மை கடல் நீர் மட்டம் அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறோம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+