பாகிஸ்தான் அரசு தன்னுடைய குடிமக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கு கூட முடியாமல் தவித்து வருகிறது. அப்படி இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தானை பொருத்தவரை ராணுவம் மிகவும் அதிகாரம் மிகுந்த ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம். மற்ற அரசு துறைகளைப் போலவே பாகிஸ்தானிலும் ராணுவ ஊழியர்களுக்கு அடிப்படை பேஸிக் பே ஸ்கேல் என்ற அமைப்பு முறையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பொறுப்புக்கும் ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற வகையில் ராணுவ வீரர்களுக்கான சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. India.com என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி பாகிஸ்தான் ராணுவத்தில் நுழைவு நிலையில் இருக்கக்கூடிய ராணுவ வீரர்களுக்கு உதாரணமாக ஜூனியர் கமிஷன் ஆபீஸர் பதவியில் இருப்பவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டு ரூபாய் மதிப்பில் 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சம்பளத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
அடுத்ததாக நான் கமிஷன் ஆபீஸர்ஸ் என்ற பிரிவில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு பே ஸ்கேல் 5 மற்றும் 6இன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டு ரூபாய் மதிப்பில் 18 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். ஒரு இந்திய ரூபாய் என்பது பாகிஸ்தானின் 3.30 ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் 5 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
கணிசமான அனுபவத்துடன் பணியில் இருக்கும் மத்திய நிலை ராணுவ அதிகாரிகளுக்கு அதாவது கேப்டன்களாக இருப்பவர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது 15 ஆயிரத்திலிருந்து 27 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். அதே போல ஆர்மி மேஜர் பொறுப்புகளில் இருக்கும் வீரர்களுக்கு 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை இந்திய ரூபாயின் மதிப்பில் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இது தவிர மத்திய அளவில் இருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கு வீட்டு வாடகை , போக்குவரத்து செலவு மற்றும் பிற அலோவென்ஸுகள் வழங்கப்படுகின்றன. மூத்த நிலை அதிகாரிகளாக அதாவது கலோனியல் மற்றும் பிரைகிரேடர்களாக இருப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் இவர்களுடைய குடும்பத்தினருக்குமான தங்குமிட செலவுகள் ,போக்குவரத்து செலவுகள் , மருத்துவ செலவுகள் உள்ளிட்டவற்றை ராணுவமே கவனித்துக் கொள்கிறது.
ராணுவ தளபதியாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர அவர்களுக்கு ஆடம்பர குடியிருப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. மற்ற நாடுகளைப் போலவே பாகிஸ்தானிலும் ராணுவத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு பணி மட்டுமில்லாமல் மருத்துவ அதிகாரிகள். பொறியாளர்கள் ஆகிய பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சுமார் 18 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications