அமெரிக்கா: உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர்தான் என்விடியா நிறுவனத்தின் ஜென்சென் ஹீவாங். இவர் ஆண்டுதோறும் 8 பில்லியன் டாலர்கள் வரியை செலுத்தாமல் தவிர்க்கிறார். இதற்கு இவர் பின்பற்றும் உத்திகள் என்ன என்பதை நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் துறைக்கு தேவையான சிப்களை தயாரித்து வழங்கும் நிறுவனம்தான் என்விடியா, இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் இதன் தலைமை செயல் அதிகாரியும் ,துணை நிறுவனருமான ஜென்சென் ஹூவாங்கின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது . தற்போது 61 வயதாகக்கூடிய ஜென்சென் ஹூவாங் அமெரிக்கா பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 127 பில்லியன் டாலர்கள்.
பொதுவாக இது போன்ற அதிக வருமானம் ஈட்டக்கூடிய மற்றும் அதிக சொத்து வைத்திருக்கும் நபர்கள் அமெரிக்காவில் கணிசமான தொகையை எஸ்டேட் வரியாக செலுத்த வேண்டும். ஒருவரின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலரை கடந்துவிட்டால் அதில் 40%ஐ எஸ்டேட் வரியாக செலுத்தியாக வேண்டும். ஆனால் ஜென்சென் ஹூவாங் சில உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆண்டுதோறும் 8 பில்லியன் டாலர்கள் வரியை செலுத்தாமல் தவிர்க்கிறாராம்.
அவர் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகளின் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் இந்த விவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 1916 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் எஸ்டேட் டேக்ஸ் வரியை அறிமுகம் செய்தது. ஆனால் இதில் பல்வேறு ஓட்டைகளை கண்டுபிடித்து பணக்காரர்கள் இந்த வரியை செலுத்தாமல் தப்பி விடுகின்றனர்.
இந்த எஸ்டேட் டேக்ஸினை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அரசு வரியை வசூல் செய்திருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் 120 பில்லியன் டாலர்கள் வரியாக வசூல் செய்திருக்கலாமாம்.ஆனால் அதில் ஒரு சொற்பமான தொகையை தான் அரசாங்கம் பெற்றிருக்கிறது.
2012 ஆம் ஆண்டில் ஜென்சென் ஹூவாங் இந்த வரியில் இருந்து தப்புவதற்காக ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அறக்கட்டளையின் நிறுவியதோடு என்விடியா நிறுவனத்தில் இருந்த 5.84 லட்சம் பங்குகளை இந்த அறக்கட்டளைக்கு என ஒதுக்கினார்.
அந்த சமயத்தில் இந்த பங்குகளின் மொத்த மதிப்பு 7 மில்லியன் டாலர்களாக இருந்தது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தொகையை அறக்கட்டளைக்கு ஒதுக்கீடு செய்து விட்டால் அவர்கள் எஸ்டேட் மற்றும் கிப்ட் டேக்ஸ்களில் இருந்து தப்ப முடியும். அதைத்தான் ஜென்சென் ஹூவாங் பின்பற்றி இருக்கிறார்.
தற்போது ஜென்சென் ஹூவாங் அறக்கட்டளை வைத்திருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பீடு 3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது அறக்கட்டளை பெயரில் இருப்பதால்தான் எந்த வரியும் செலுத்த தேவையில்லையாம். அதே போல அறக்கட்டளைக்கு நிதி வழங்குவதாக காட்டி வருமான வரியிலும் இவர் சலுகை பெறுகிறாராம்.
Story Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications