அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார். குறிப்பாக ஹெச்1பி விசா மாணவர்களுக்கு வழங்கக்கூடிய எஃப்1 விசா உள்ளிட்டவற்றில் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மிகத் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தி தான் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது.
கோல்டு கார்டு: அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வேண்டும் என எண்ணுபவர்களுக்கு கோல்ட் கார்டு எனப்படும் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதமே இந்த கார்டு எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தையும் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்.

ரூ.42.79 கோடி கட்டணம்: கோல்டு கார்டு என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 42.79 கோடி முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கிறது. அதாவது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற 5 மில்லியன் டாலர்கள் வழங்க வேண்டும் என்பதே இதன் நிபந்தனை. இதனை கோல்டு கார்டு என்றும் டிரம்ப் கார்ட் என்றும் அழைக்கின்றனர்.
இணையதளம் அறிவிப்பு: தற்போது வெளிநாட்டவர்கள் இந்த கோல்ட் கார்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அதிகாரபூர்வ இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளமான டிரூத் சோசியல் பக்கத்தில் "உலகிலேயே மிகச்சிறந்த நாடான அமெரிக்காவில் குடியேறுவதற்கான கோல்டன் கார்டு விசா பெறுவது எப்படி என பலரும் என்னிடம் கேட்டனர், இதோ இணையதளம் வந்துவிட்டது" என கூறியுள்ளார்.
கிரீன் கார்டுக்கு மாற்றாக கோல்டு கார்டு: அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வேண்டும் என்றால் வெளிநாட்டவர்கள் கிரீன் கார்டு பெற வேண்டும். ஆனால் அதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கிரீன் கார்டுக்கு ஒரு மாற்றாக தான் கோல்டு கார்டு என்ற திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பக்கூடிய நபர் 5 மில்லியன் டாலர்களை செலுத்தி இந்த கோல்டு கார்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கும் உரிமை கிடைக்கும்.
எப்படி விண்ணப்பம் செய்வது?: விருப்பம் உள்ள நபர்கள் https://trumpcard.gov என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் பெயர் ,நாடு மற்றும் பிற விபரங்களை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து அதிகாரப்பூர்வமாக காத்திருப்போர் பட்டியலில் உங்களுடைய பெயர் சேர்க்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது . இதற்கு தனிநபராகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது ஒரு தொழில் நிறுவனமாகவும் விண்ணப்பம் செய்யலாம் .
இந்தியர்கள் ஆர்வமா? : இந்த விண்ணப்பத்தில் ஒரு நபர் அவருடைய வாழ்க்கை துணை மற்றும் குடும்பத்தினருக்கு என கோல்டு கார்டினை பெற முடியும். நிறுவனங்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக கோல்டு கார்டு விண்ணப்பம் செய்யலாம். தற்போதைக்கு இதில் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படுகின்றன. கூடிய விரைவில் எப்படி இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த இணையதளம் தொடங்க தொடங்கிய உடனே ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்து விண்ணப்பம் செய்து இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications