உலக நாடுகளின் பிராண்டு மதிப்பு குறித்த 'தேசிய பிராண்டுகள் 2018' ஆய்வறிக்கையினைப் பிராண்ட் ஃபினான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் படி இந்தியாவின் பிராண்டு மதிப்பு 2018-ம் ஆண்டு உயர்ந்து இருந்தாலும் டாப் 10 நாடுகள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா
2016-ம் ஆண்டு இந்தியாவின் பிராண்டு மதிப்பு 2,046 பில்லியன் டாலராக இருந்து வந்த நிலையில் 2018-ம் ஆண்டு 5 சதவீதம் உயர்ந்து 2,159 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவின் பிராண்ட் மதிப்பு ‘ஏஏ' ஆகத் தான் உள்ளது. ஆனால் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி இத்தாலி 8வது இடத்தினைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா
தேசிய பிராண்டுகள் மதிப்புப் பட்டியலில் அமெரிக்காவின் பிராண்டு மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து 25,899 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதுவே 2016-ம் ஆண்டு 21,055 பில்லியன் டாலராக இருந்தது.
சீனா
சீனாவின் பிராண்டு மதிப்பு 25 சதவீதம் உயர்ந்து 12,779 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவே 2016-ம் ஆண்டு 10,209 பில்லியன் டாலர்களாக இருந்தது.
சிறந்து செயல்படும் தேசிய பிராண்டுகள்
உலகின் டாப் 10 சிறந்து செயல்படும் தேசிய பிராண்டுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. சைப்ரஸ், காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட நாடுகள் இந்த டாப் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
பிராண்ட் ராங்கிங்
இந்தப் பிராண்ட் ராங்கிங் ஒரு நாடு எப்படிச் செயல்படுகிறது என்பது மட்டும் இல்லாமல் பிற நாடுகள் எப்படிப் போட்டி போடுகின்றன என்பதையும் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதே சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் நாடுகள், அதிகளவில் ஏற்றுமதிகளைச் செய்யும் நாடுகள், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகள் மற்றும் வேலைக்காக அதிகளவில் வெளிநாட்டவர்கள் செல்லும் நாடுகளைப் பொருத்து இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications