டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறார். அப்படி அவர் கொண்டு வந்திருக்கும் ஒரு வரி முறைதான் ரெசிபுராக்கல் வரி முறை. ரெசிப்புராக்கல் வரி முறை என்பது எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும். இப்படி இருக்கையில் அமெரிக்க குடும்பங்களில் வரிவிதிப்பு தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்த கருத்தை இந்திய அமெரிக்க எழுத்தாளரான ராமித் சேதி தனது X பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
எழுத்தாளரும் நிதி ஆலோசகரமான ராமித் சேதி அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்து தனது X பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவருடைய பதிவு விரைவில் பிரபலம் அடையத் தொடங்கியது.

"ஐ வில் டீச் யூ டு பீ ரிச்" என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியர் தான் ராமித் சேதி. இவர் அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள வரிகளால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வரிச் சலுகைகளால் அமெரிக்காவில் வசிக்கும் பணக்காரர்கள் பயனடைந்தாலும் உழைக்கும் வர்க்கத்தினர் பலர் விலை உயர்வால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
20% முதல் 45 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியால் வீட்டில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும். டவல்கள், காபி மேக்கர்கள், கடற்பாசிகள், பவர் டூல்கள் போன்ற பொருட்கள் பெரும்பாலானவை சீனா, மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து தான் அமெரிக்காவுக்கு இருக்குமதி செய்யப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த பொருட்கள் அனைத்தும் தற்போதைய வரி முறையின் காரணமாக கடுமையாக விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற விலை உயர்வுகள் ஒரு சராசரி அமெரிக்க குடும்பத்தின் செலவுகளை அதிகரிக்கும் என்றும், "34 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை வரிகளை அனுபவியுங்கள்" என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.
ராமித் சேதியின் முக்கிய கருத்தே, இது போன்ற விலை உயர்வு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை பாதிக்கும் என்பதுதான். அதே சமயம் வரி குறைப்புகள் மூலம் உயர் வருமானம் பெறும் தனிநபர்கள் பயனடைவார்கள்.
ராமித்தின் பதிவு விரைவில் பிரபலமடைந்தது. பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினர். ஒரு பயனர் யாராவது இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனர் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்குபவர்கள் வரியை ஈடுகட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications