சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட தலைமை செயல் அதிகாரி மீது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Deeptanshu 'Deep' Prasad என அறியப்படும் பிரசாத் என்பவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் Quantum Generative Materials என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவர் தன்னை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை வேளையில் இந்த தாக்குதல் நடந்ததாக அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு முறை தன் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் "நேற்று இரவு அதிகாலை மூன்று முப்பதிலிருந்து நான்கு மணிக்குள் இருக்கும். நான் சான் பிரான்சிஸ்கோவில் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அருகே கடற்கரையிலிருந்து ஹோட்டலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது அடையாளம் தெரியாத சிலர் என்னை துரத்தி வந்தனர். வந்து என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்" என தெரிவித்திருக்கிறார்.
முதலில் ஒரு முறை அவரை துப்பாக்கியால் சுட்ட நபர்கள் மீண்டும் துரத்தி வந்து இரண்டாவது முறையாக துப்பாக்கியால் சுட்டனர் என அவர் கூறியுள்ளார். முதல் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து தான் ஓடியதாகவும் ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அப்போது இரண்டாவதாக தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக அவர்கள் துப்பாக்கி வைத்திருந்தனர் நானும் ஹோட்டல் ஊழியரும் இதனை பார்த்தோம் என கூறியுள்ளார்.
இந்த நிகழ்வை நினைத்தால் இன்னமும் என் உடல் எல்லாம் நடுங்குகிறது என பிரசாத் பதிவு செய்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக நான் சான் பிரான்சிஸ்கோ காவல்துறையிடம் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் அதனை விசாரிக்காமலேயே விட்டுவிட்டனர் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
என்னை தாக்கியவர்கள் துப்பாக்கியை கையில் வைத்திருந்ததை நானும் அந்த ஹோட்டல் ஊழியரும் பார்த்தோம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தை நினைத்தால் இன்னும் கூட எனக்கு உடல் நடுங்குகிறது ஆனால் காவல்துறையோ எந்த வித விசாரணையும் நடத்தாமல் இது சாதாரண ஒரு பட்டாசு வெடிப்பு நிகழ்வு என கூறி வழக்கை முடித்து வைத்து விட்டதாக கூறியிருக்கிறார். இது மிகவும் ஆபத்தான போக்கு என்றும் அவர் சாடியுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் 30 ஆண்டுகளில் இப்படி மோசமான அனுபவம் எனக்கு கிடைத்தது இல்லை என கூறும் அவர் ஆபத்தான நகரமாக சான் பிரான்சிஸ்கோ மாறி விட்டது என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ் திடீர் ராஜினாமா.. கண்ட்ரோல்-ஐ கையில் எடுக்கும் ராகுல் பாடியா..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications