அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்காக வழங்கப்படும் க்ரீன் கார்டு முறைக்கு விண்ணப்பிப்பதில் 4-ல் மூவர் இந்தியர்கள் என்று அன்மையில் வெளியான தரவுகள் கூறுகின்றன.
2018-மே மாதம் வரையிலான கணக்கு விவரங்களின் படி அமெரிக்காவில் க்ரீன் கார்டு வேண்டும் என்று 3,95,025 நபர்கள் விண்னப்பித்துள்ளனர்.
இந்தியர்கள்
அமெரிக்காவில் க்ரீன் கார்டு வேண்டும் என்று விண்ணப்பித்த இந்தியர்கள் எண்ணிக்கை 3,06,601 நபர்கள் ஆவர். இந்தத் தகவல் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சீனா
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா செல்லும் சீனர்களில் தற்போது 67,031 நபர்கள் க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
பிற நாடுகள்
இந்தியா மற்றும் சீனாவை தவிற பிற எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களும் 10,000-க்கு அதிகமாக அமெரிக்காவில் க்ரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கவில்லை. எல் சால்வடார் (7252), குவாத்தமாலா (6,027), ஹோண்டுராஸ் (5,402), பிலிப்பைன்ஸ் (1,491), மெக்சிகோ (700) மற்றும் வியட்நாம் (521).
கட்டுப்பாடு
அமெரிக்காவில் தற்போது உள்ள விதிமுறைகளின் படி ஒரு நிதி ஆண்டில் ஒரு நாட்டில் இருந்து 7 சதவீதத்தினருக்கு அதிகமாக க்ரீன் கார்டுகளுகான அனுமதிகள் வழங்கப்படக் கூடாது. எனவே இந்தியர்கள் நீண்ட காலமாக க்ரீன் கார்டு காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.
எச்-1பி விசா
அமெரிக்காவில் க்ரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் அனைவரும் எச்-1பி விசா திட்டம் மூலம் அதிகத் திறன் படைத்த ஊழியர்களாக அங்கு இருக்கும் நிறுவனங்களில் பணிபுரிய சென்றவர்களே ஆவர்.
காத்திருப்புக் காலம்
தற்போது இருக்கும் நிலையினைப் பார்த்தால் இந்தியர்கள் அமெரிக்காவில் எச்-1பி விசா பெற 70 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் புதியதாகத் துவங்கப்பட்ட ஜிசிரிஃபார்ம்ஸ் என்ற குழுமம் 25 முதல் 92 ஆண்டுகள் வரை இந்தியர்கள் காத்திருந்து க்ரீன் கார்டு பெரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications