அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு பணத்தை அனுப்பும் போது 5 சதவீத வரி செலுத்தும் வகையிலான புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் செலவினை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய மசோதாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பும்போது அதற்கு 5 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹெச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறும்போது அமெரிக்காவில் வசிக்கக்கூடிய லட்சக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக வேலைக்காக அமெரிக்காவில் சென்று தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதற்கு ஐந்து சதவீத வரியை செலுத்த வேண்டி இருக்கும்.

The One Big Beautiful Bill என்ற பெயரில் இந்த மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 389 பக்கங்கள் கொண்ட இந்து ஆவணத்தின் 327 ஆவது பக்கத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் தாங்கள் அனுப்பக்கூடிய பணத்தில் 5 சதவீத தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் குறைந்தபட்ச தொகை அனுப்பினாலும் சரி அல்லது அதிகபட்ச தொகையை அனுப்பினாலும் சரி அவர்கள் அனுப்பும் வகையில்5 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்கள் பணத்தை பரிமாற்றம் செய்யும் போது அமெரிக்காவிலேயே பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து அதிகமான அளவு பணம் அனுப்பப்படக்கூடியது அங்கே வசிக்கும் இந்தியர்கள் தான்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் படி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனிநபர்கள் 2023-24 ஆம் நிதியாண்டில் 32 பில்லியன் டாலர்களை தாயகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் 45 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிடும் தகவல் குறிப்பிடுகிறது.
ஒருவேளை இந்த வரி நடைமுறைக்கு வந்திருந்தால் இந்தியர்கள் 1.6 பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் அமெரிக்கா அரசுக்கு வரியாக செலுத்த வேண்டியது இருக்கும். இந்த மசோதாவின் மீது இந்த மாதத்திலேயே அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விவாதம் நடைபெற இருக்கிறது ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இது சட்டமாக மாறலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

வருமானத்தை மறைத்த உணவகங்கள்: சிக்கிய 63,000 உணவகங்கள்! IT டிபார்ட்மெண்ட் அனுப்பிய நோட்டீஸ்!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications