டிரம்பின் முடிவை எதிர்த்து ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் 5 நாடுகள்!

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வரும் நிலையில் அதற்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த கூடிய முடிவு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ள இந்தப் புதிய முடிவானால் ஈரான் உடனான வர்த்தகப் பரிமாற்றங்கள் புதிய வழிமுறையில் தொடர்ந்து செயல்படும் என்று தெரியவந்துள்ளது.

5 நாடுகள்

5 நாடுகள்

இதற்கிடையில் திங்கட்கிழமை பிரட்டன், பிரான்ஸ், ஜெர்மெனி, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசியது மட்டும் இல்லாமல் டிரம்பின் முடிவை எதிர்த்து ஈரானுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

அதற்காக மத்திய மற்றும் வணிக வங்கிகளைத் தவிர்த்து புதிய பணப் பரிமாற்ற முறையினைச் செயல்படுத்த ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது.

 

ஒபாமா - டிரம்ப்

ஒபாமா - டிரம்ப்

2015-ம் ஆண்டுப் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் ஈரானுக்கு அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து வந்த டொணால்டு டிரம்ப் அதில் இருந்து மே மாதம் விலகியது மாட்டும் இல்லாமல் ஈரான் மீது பொருளாதாரத் தடையினையும் விதித்துள்ளார்.

பிற நாடுகளின் ஆதரவு

பிற நாடுகளின் ஆதரவு

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தாலும் அதில் உள்ள பிற முக்கிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளித்து வருகிறன.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்தியா உட்படப் பல உலக நாடுகளுக்குப் பெறும் அளவில் ஈரானில் இருந்து தான் கச்சா எண்ணெய் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா விதித்துள்ள தடையினை அடுத்து இந்தியா உட்படப் பல நாடுகளால் அங்கு இருந்து கச்சா என்நெய்யினை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் உள்ளன.

 கோரிக்கை நிராகரிப்பு

கோரிக்கை நிராகரிப்பு

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா இந்தியாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை அமெரிக்கா நிராகத்தது மட்டும் இல்லாமல் மீறினால் உங்கள்மீது தடை விதிக்கப்படும் என்று மிரட்டியது.

மிரட்டலுக்கு அடிபணிந்த இந்தியா

மிரட்டலுக்கு அடிபணிந்த இந்தியா

அதே நேரம் ஈரான் அரசும் ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய்யினை இந்தியா இறக்குமதி செய்துகொள்ளலாம் என்ற சலுகையினை அளித்தது. ஆனால் எங்கு அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்பட்டுப் பொருளாதாரச் சரிவு நேரிடுமோ என்று மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து நவம்பர் மாதம் முதல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்வதில் இருந்து பின்வாங்கியுள்ளது.

 மறு பரிசீலனை செய்யுமா?

மறு பரிசீலனை செய்யுமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கனவே விண்ணைத்தொட்டு வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் உட்பட 5 நாடுகளின் முடிவினை அடுத்து இந்திய அரசு ஈரான் உடனான வர்த்தகத்தினைத் தொடர்வது குறித்து மறு பரிசீலனை செய்யுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+