வீடற்ற குடும்பங்களுக்கும், குறைவான வருமானம் பெறும் சமூகத்துக்கும் உதவும் வகையில் 2 பில்லியன் டாலர்களை ஒதுக்க அமேசான் நிறுவனர் ஜெப் பெஷோஸ் முடிவு செய்துள்ளார்.
எந்த ஒரு சிறுவனும் வீதியில் உறங்கக் கூடாது எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வறுமையில் வாடும் குடும்பங்களின் உடனடித் தேவைகள் பூர்த்திச் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். இதேபோல் தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டு விருதுகளை அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
முன்னுக்கு வந்த பிஸோஸ்
163.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்பைக் கொண்ட அமேசான் நிறுவனர் பெஷோஸ், உலகின் மிகப்பெரிய பணக்காரர் எனப் புளூம் பெர்க் அண்மையில் தெரிவித்தது. பங்குகளை விற்றுள்ள நிலையில் அவருடைய சொத்தின் நிகர மதிப்பு 64.7 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பில்கேட்ஸ் மற்றும் வாரன் பப்பட் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பெஷோஸ்.
கருத்துக் கேட்பு
சம்பாதித்த பணத்தை எவ்வாறு செலவு செய்யலாம் எனக் கடந்த ஆண்டுப் பொதுமக்களிடம் கருத்து கேட்டார் பிஸோஸ்.வறுமை நிலையில் உள்ள பொதுமக்களின் அவசரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் திட்டத்தைத் தீட்ட ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். சுகாதாரத் திட்டங்களைச் செய்யவும், கடன் மன்னிப்பு வழங்கவும் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டன.
நன்கொடை
பிஸோஸ் குடும்ப அறக்கட்டளை சார்பாகக் கல்விக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் பிரட் ஹட்சின்ஸன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏழைகள் மீது கரிசனம்
2016 ஆம் ஆண்டுச் சியாட்டில் காலியான ஒரு ஹோட்டலை, வீடற்ற ஏழைகளின் தற்காலிக தங்குமிடமாக மாற்றிக் கொடுத்த தொண்டு நிறுவனத்துக்கு அமேசான் ஆதரவு கொடுத்தது. இதேபோல் அமேசானின் புதிய அலுவலக வளாகத்தில் 47000 சதுர அடியில், வீடற்ற ஏழைகளுக்கு நிரந்தரத் தங்குமிடம் ஒன்றை அமைத்து வருகிறது.
அஞ்சாத அமேசான்
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஏழைகளுக்கு அமேசான் நிறுவனம் வழங்கி வந்த வீடு வழங்கும் திட்டத்தைச் சியாட்டில் சிட்டி கவுன்சில் ரத்து செய்தது. இருப்பினும் இதற்கு அஞ்சாத அமேசான், பொருளாதார வளர்ச்சி என்ற குறிக்கோளில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்தது. ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் தொண்டு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்யும் அறிவித்தது.
ஜாக் மா அறக்கட்டளை
அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, சம்பாதித்த பணத்தைக் கல்விச் சேவைக்குச் செலவிடப் போவதாகத் தெரிவித்தார். ஓய்வை அறிவித்த அவர் ஜாக் மா அறக்கட்டளையை விரைவில் தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications