தொழில்நுட்ப துறையில் எப்போது எலியும் பூனையுமாக இருக்கும் ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் மத்தியிலான போட்டியலில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது ஆப்பிள். தோல்வியின் விளைவு 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.
சான் பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் சில வருடங்களுக்கு முன் கூகிள் நிறுவனத்திற்குப் போட்டி போடும் விதமாக ஆள்ளில்லா கார் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறையில் ஆராய்ச்சியில் இறங்கியது.
இதனால் கூகிள் நிறுவனம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையே ஆடிப்போனது. காரணம் ஆப்பிள் நிறுவனம் தொட்டதெல்லாம் வெற்றி தான். ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் தனது ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இருந்தால் மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது போல் ஆட்டோமொபைல் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பதே அவர்களின் பயம்.

ஆனால் தற்போது நிலையே வேறு, ஆப்பிள் நிறுவனம் ஆட்டோமோடிவ் துறையில் செய்து வந்த ஆராய்ச்சி மற்றும் திட்டங்களைக் கைவிடப் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆப்பிள் பட்டிப்படியாத இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடு மற்றும் ஊழியர்களைக் குறைத்து வருகிறது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் துறையில் பணியாற்றும் 1,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் ஊழியர்கள் மட்ட அளவில் இதற்கான பணிகள் நடத்து வருகிறது.

2015ஆம் ஆண்டின் கடைசியில் இந்த ஆட்டோமோடிவ் குழுவிற்குக் கடைசி வாய்ப்பு அளித்தது. ஆனால் இக்குழு தனது திறமையை நிருபனம் செய்யத் தவறியதால் இப்பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆள்ளில்லா கார் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் மிகப்பெரிய முதலீட்டில் தொடர்ந்து மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications