இங்கிலாந்து: உலக ஏழை மக்களின் சொத்து மற்றும் உடைமைகளின் பாதி, உலகின் டாப் 62 பணக்காரர்களிடம் உள்ளது என ஆக்ஸ்ஃபோம் என்னும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் சுமார் 94 நாடுகளில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோம் என்னும் பிரிட்டன் நாட்டுத் தொண்டு நிறுவனம், சர்வதேச அளவில் ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் பல முக்கியத் தகவல் கிடைத்துள்ளது.
62 பணக்காரர்கள்
உலக நாடுகளில் இருக்கும் 3.6 மில்லியன் ஏழை மக்களின் சொத்தில் பாதி அளவு, 2010ஆம் ஆண்டில் இருந்து சுமார் 41 சதவீதம் குறைந்துள்ளது என ஆக்ஸ்ஃபோம் தெரிவித்துள்ளது.
மேலும் இவர்களின் சொத்துக்களின் அளவு தற்போது உலகின் 62 டாப் பணக்காரர்களின் சொத்துக்களுக்கு இணையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
1.76 டிரில்லியன் டாலர்
மேலும் இந்த 62 பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த சொத்து மதிப்பின் அளவுகள் 1.76 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
12 மாதம்
கடந்த 12 மாதத்தில் உலக நாடுகளில் இருக்கும் ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தின் அளவு 1 சதவீதத்திற்கு அதிகமான வித்தியாசத்தை எட்டியுள்ளது.
பணக்காரர்களின் எண்ணிக்கை
2015ஆம் ஆண்டில் 3.6 மில்லியன் ஏழை மக்களின் சொத்தில் பாதி அளவு 62 பணக்காரர்களிடம் இருக்கும் நிலையில், 2010ஆம் ஆண்டில் 388 ஆகவும், 2011ஆம் ஆண்டில் 177 ஆகவும், 2014ஆம் ஆண்டில் 80ஆகவும் 2015ஆம் ஆண்டில் 62 ஆகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதன் மூலம் சிவாஜி சொன்னது உண்மையானது.
சிவாஜி என்ன சொன்னார்..
இயக்குநர் ஷங்கரின் சிவாஜி படத்தில் ரஜினி, ஏழைகள் மேலும் ஏழையாகவும், பணக்காரர்கள் மேலும் பணத்தைச் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற வசனம் இருக்கும். அது தற்போது உண்மையாகியுள்ளது.
ஆய்வின் முடிவுகள்
உலகப் பொருளாதாரம் 2016 மாநாட்டை எதிர்நோக்கி ஆக்ஸ்ஃபோம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.