கலிபோர்னியா, அமெரிக்கா: உலகின் முன்னணி டெக் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சத்ய நாதெல்லாவே இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் தான். இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்திய ஊழியர் ஒருவர் அலுவலகத்தில் மரணமடைந்தது பல கேள்விகளை எழுப்புகிறது.
கலிபோர்னியாவில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலகத்தில் வேலை செய்து வந்தவர் தான் பிரதிக் பாண்டே . 35 வயதான இவர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வழக்கம் போல அலுவலகம் சென்றார், வேலை பார்த்தார் ஆனால் அடுத்த நாள் அதிகாலை இவர் வேலை செய்த டெஸ்கிலேயே மரணமடைந்து காணப்பட்டார். அதிகாலை 2 மணி அளவில் மரணமடைந்த நிலையில் இவருடைய உடல் மீட்கப்பட்டிருக்கிறது.

வேலை செய்து வந்த டெஸ்கில் தலை சாய்ந்த நிலையில் இருந்ததை சக ஊழியர்கள் பார்த்து மீட்டு மருத்துவர்களை அழைத்து பரிசோதனை செய்திருக்கின்றனர். அதில் அவர் மரணமடைந்தது தெரிய வந்தது. முதல் கட்ட ஆய்வில் அவர் மாரடைப்பை ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து படிப்பு நோக்கத்திற்காக அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர் தான் பிரதீக் .
முதுநிலை படிப்பு முடித்த பிரதிக் பாண்டே ஆப்பிள், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் எல்லாம் வேலை செய்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு தான் அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் என்ஜினியராக பணிக்கு சேர்ந்தார். கடின உழைப்பாளி என உடன் பணிபுரிவோரும் குடும்பத்தினரும் கூறுகின்றனர். இவர் மிகவும் பாசிட்டிவான ஒரு நபர் என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இரவு நீண்ட நேரம் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யக்கூடிய ஒரு நபர் என்றும் அவர் மரணமடைவதற்கு முன்னாடி நாள் இரவு 8 மணி அளவில் அவர் அலுவலகத்திற்கு சென்றார் என்றும் அவருடைய மாமா மனோஜ் தெரிவித்துள்ளார். பணி சார்ந்த அழுத்தங்கள் தான் அவருக்கு மாரடைப்பு வர காரணம் என கூறுகிறார். முதலில் இவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சந்தேகத்திற்கு இடமான எந்த தடையமும் கிடைக்கவில்லை என அமெரிக்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .
கிரிமினல் செயல்கள் எதுவும் நடைபெற்றதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர். பணி சார்ந்த அழுத்தங்கள் தான் அவருடைய இந்த மாரடைப்பு மரணத்திற்கு காரணம் என அவரின் மாமாவான மனோஜ் வேதனை தெரிவித்து இருக்கிறார். மைக்ரோசாஃப்ட் உள்ளிட அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு பணி சார்ந்த ஏற்படக்கூடிய அழுத்தங்கள் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தயவுசெய்து பாருங்கள் என வலியுறுத்தி இருக்கிறார். இது ஒரு ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு உதவும் என சுட்டிக்காட்டி இருக்க்கிறார்.
நன்றாக வேலைக்கு சென்ற ஒரு நபர் திடீரென மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியை தருகிறது என்பதை வார்த்தைகளால் கூறி விட முடியாது என தெரிவித்திருக்கிறார்.சில தினங்களுக்கு முன்னர் தனக்கு வேலை சார்ந்த அழுத்தங்கள் இருப்பதாக கூறியதாகவும் அவருக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் இல்லை என்றும் மனோஜ் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க



Click it and Unblock the Notifications