உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 2018ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் ஆதாவது 100 கோடி சாதனங்களில் தனது கடைசி அறிமுகமான விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை இயங்க வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்திருந்தது.
கடந்த செப்டம்பர் மாதமே 40 கோடி சாதனங்களில் இயங்கிய நிலையில் தற்போது 50 கோடி சாதனங்களில் இயங்க துவங்கியுள்ளது. இதன் மூலம் இலக்கில் பாதி தூரத்தை மைக்ரோசாப்ட் எட்டியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இலக்கை அடைய முடியாது எனவும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 படுதோல்வி அடைந்த நிலையில், ஆப்பிள்-இன் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் நிறுவனத்தின் ஆண்டராய்டு போட்டிப்போடவும் மீண்டும் சந்தையில் ஆதிக்கம் செலுத்தவும் விண்டோஸ் 10 உதவியது.
50 கோடி சாதனங்களை அடைந்த செய்தியை அமெரிக்காவின் சியாடில் நகரில் நடந்த முக்கிய கூட்டத்தில் சத்ய நாடெல்லா அறிவித்தார்.
இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 0.85 சதவீதம் சரிந்து 68.46 அமெரிக்க டாலராக உள்ளது.