இஸ்லாமாபாத், பாகிஸ்தான்: உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானிலும் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக கூறி இருக்கிறது.
இது பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட 25 ஆண்டு காலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய சேவையை முடித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்பம் முன்னேற்றம் என பல்வேறு நம்பிக்கைகளோடு கால் பதித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறது .மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றனர் .

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் தன்னுடைய முதல் அலுவலகத்தை நிறுவியது. இந்த நிலையில் 25 ஆண்டுகள் கழித்து அதே ஜூன் மாதம் முடிந்த பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டு நிறுவனத்தையும் மூடி இருக்கிறது. மைக்ரோசாப்ட் வருகையால் பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்பத் துறை நல்ல வளர்ச்சி அடைந்தது, குறிப்பாக உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் பலரும் ஐடி துறை நோக்கி பயணப்பட தொடங்கினர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் நிறுவப்படுவதற்கு உறுதுணையாக இருந்த ஜெபார் ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் அலுவலகத்தை அமைத்தது நிறுவனத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பை என்னிடம் வழங்கியது, அது வெறும் வேலை அல்ல பல ஆயிரம் பேருக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பாகத்தான் இருந்தது எனக் கூறியிருக்கிறார்.
அரசின் திட்டங்களை டிஜிட்டல் மயமாக்கியதில் மைக்ரோசாப்டின் பங்கு முக்கியமானதாக இருந்தது என குறிப்பிடும் அவர் நவீன ஐடி வேலைகளை பாகிஸ்தானிற்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் அறிமுகம் செய்த ஒரு நிறுவனம் தற்போது நாட்டை விட்டே வெளியேறுகிறது என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்ற வந்த ஊழியர்களும் நிறுவன அலுவலகம் மூடப்பட்டதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்தெந்த நாடுகளில் எல்லாம் தங்கள் நிறுவனத்திற்கு வளர்வதற்கான வாய்ப்பும் சந்தையும் இல்லையோ அங்கிருந்து எல்லாம் செயல்பாடுகளையும் நிறுத்தி வருகிறது. பாகிஸ்தானில் அலுவலகத்தை மூடினாலும் மூன்றாம் தரப்பு கூட்டு நிறுவனங்களோடு இணைந்து நாட்டுக்கு தேவையான ஐடி துறை சார்ந்த சேவைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து வழங்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications