இன்று உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவானாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், உலகளவில் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பினை எட்டிய மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் இன்றைய இந்திய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்.
15 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது 5,800% மேலாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அந்தளவுக்கு மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று அமர்வில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலையானது 182.86 டாலர்கள் என்ற லெவலை தொட்டது. இந்த நிலையில் தான் இதன் சந்தை மதிப்பானது 3 டிரில்லியன் டாலரினை எட்டியுள்ளது.
மூன்று மடங்கு வளர்ச்சி
குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது பெருந்தொற்று காலக்கட்டத்தில் கூட இந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியினை எட்டியது. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துதலாகவும் இருந்தது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனம் இந்த மாபெரும் உச்சத்தினை எட்டியுள்ளது.
16 மாதங்களில் பெரும் வளர்ச்சி
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2018ல் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான டெக் நிறுவனமாக இருந்தது. இது ஆகஸ்ட் 2020ல் 2 டிரில்லியன் டாலர் மதிப்பினை எட்டியது.
முதல் ஒரு டிரில்லியன் டாலரை எட்ட ஆப்பிள் நிறுவனம் 38 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. ஆனால் 2 டிரில்லியன் டாலரினை எட்ட 24 மாதங்களே ஆனது. அதனை விட மூன்றாவது டிரில்லியனை எட்ட வெறும் 16 மாதங்களே ஆகியுள்ளது.
பணக்கார நிறுவனம்
இதற்கிடையில் தான், தற்போதைய நிலவரப்படி உலகிலேயே பணக்கார நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இது இந்தியாவின் அனைத்து ஐடி நிறுவனங்களின் ரொக்க கையிருப்புகளை விட அதிகமாகவே கொண்டுள்ளது. அந்தளவு ரொக்க இருப்பினை ஆப்பிள் நிறுவனம் வைத்துள்ளது.
186 நாடுகளின் ஜிடிபிக்கு மேல்
மேலும் ஆப்பிளின் சந்தை மதிப்பு 186 நாடுகளின் ஜிடிபியினை விட அதிகமாக உள்ளது. இதில் அமெரிக்கா , சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மட்டுமே முன்னிலையில் உள்ளன. இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதம் 2.62 டிரில்லியன் டாலராகும்.