காத்மண்டு, நேபாளம்: நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு அரசு விதித்த தடை பெரிய அளவிலான இளைஞர் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. நேபாளமே பற்றி எரியக்கூடிய நிலையில் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் சர்மா ஒலி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேபாள நாட்டு அரசு கடந்த வாரம் யூடியூப், பேஸ்புல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான சமூகவலைதளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இதற்கு அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஜென் ஸீ தலைமுறை இளைஞர்கள் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினர்.

சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் வேகமாக பரவியது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை போக்க வேண்டும், பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
முதல் நாள் அமைதியான முறையில் நடந்த போராட்டம் இரண்டாம் நாள் வன்முறையாக மாறியது. காவல்துறையினர் பாதுகாப்பு படையினரை கொண்டு போராட்டத்தை ஒடுக்கு விடலாம் என நினைத்த நேபாள அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் இதனால் தான் போராட்டம் வன்முறை பாதைக்கே திரும்பியது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்த பதிலுக்கு இவர்களும் தாக்குதல் நடத்த என 20க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன.
போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடி ,கட்டிடங்களுக்கு தீ வைத்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் கையில் கிடைத்த அமைச்சர்கள் அதிகாரிகள் மீதெல்லாம் தாக்குதலையும் நடத்தினர். இதனால் நேபாளமே தற்போது போர்க்களமாக காட்சியளிக்கிறது. இளைஞர்களின் தாக்குதலுக்கு அஞ்சி அடுத்தடுத்து அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

நேபாள அரசு சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை நீக்கியது. இருந்தாலும் பிரதமர் பதவி விலகியாக வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் தீவிரமாக இருந்தனர். இந்த சூழலில் வெளிநாட்டு அமைப்புகளின் தூண்டுதல் காரணமாகவே இந்த போராட்டம் நடப்பதாக கூறிய பிரதமர் சர்மா ஒலி நேற்றைய தினம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது பிரதமர் சர்மா ஒலி எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, அவர் தற்போதைக்கு தலைமறைவாகவே இருக்கிறார். இந்த சூழலில் நேபாள நாட்டு ராணுவம் ஆட்சியை கையில் எடுத்திருக்கிறது. நாட்டின் சுதந்திரம் , இறையாண்மையை பாதுகாப்போம் என தெரிவித்திருக்கிறது. இளைஞர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் வன்முறையை கைவிட வேண்டும் என நேபாள ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. நேபாள நாட்டு ராணுவ தளபதி அசோக் ராக் சிட்கெல் வெளியிட்டுள்ள வீடியோவில் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதிப்பாதைக்கு திரும்ப வேண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
காத்மாண்டு உள்ளிட்ட விமான நிலையங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இருந்தாலும் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்தியாவை பொறுத்தவரை நேபாளத்தில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்துடன் எல்லை பகிரும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி நிலவரத்தை கேட்டறிந்துள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications