கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+ இன்று நடத்தி முடித்த ஆலோசனை கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இருக்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, அமெரிக்கச் சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் அளவீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத இடைவேளையில் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை கூடுதலாக 2 மில்லியன் பேரல் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
OPEC அமைப்பு
இந்த OPEC அமைப்பில் அரபு நாடுகள் அதிகளவிலான ஆதிக்கம் செய்து வரும் நிலையில் ரஷ்யாவும் இக்குழுவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முடிந்துள்ள ஆலோசனை கூட்டத்தின் படி OPEC அமைப்பில் இருக்கும் நாடுகளின் தங்களது மாதாந்திர உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை
இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலை 1.91 சதவீதம் அதிகரித்து 74.87 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.38 சதவீதம் வளர்ச்சி அடைந்து 75.65 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
பொதுவாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும், தற்போது அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் இருப்பு அளவீடு குறையும் காரணத்தால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஈரான் மீதான தடை
இதற்கிடையில் ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளை விரைவில் நீக்க கோரி அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிடம் ஐநா வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே இதற்காகப் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ள நிலையில், ஈரான் நாட்டின் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றின் மூலம் காலதாமதம் ஆகி வருகிறது.
ஈரான் கச்சா எண்ணெய்
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் சர்வதேச வர்த்தகச் சந்தைக்கு வந்தால் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
இதேபோல் அமெரிக்கச் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து வரும் நிலையில் ஈரான் மீதனா வர்த்தகத் தடையை விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!



Click it and Unblock the Notifications